வியாழக்கிழமை, ஏப்ரல் 18, 2024
வியாழக்கிழமை, ஏப்ரல் 18, 2024

HomeFact CheckNewsமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமருக்கு ‘கோ பேக் மோடி’ என்ற நினைவுப்பரிசை வழங்கினாரா?

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமருக்கு ‘கோ பேக் மோடி’ என்ற நினைவுப்பரிசை வழங்கினாரா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழகத்திற்கு வருகை புரிந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘கோ பேக் மோடி’ என்கிற நினைவுப்பரிசை வழங்கியதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

Source: Twitter

Fact check/Verification:

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், நாளுக்கு நாள் கட்சிகளின் பரப்புரைகளும், மக்கள் நலத் திட்ட அறிவிப்புகளும் தேர்தல் களத்தை சூடு பிடிக்க வைத்துள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி அவர்கள் தமிழகம் வந்து சென்ற நிலையில், தற்போது பிரதமர் மோடி அவர்களும் சென்னைக்கு வருகை புரிந்துள்ளார்.

நேற்று (14/02/2021) அன்று சென்னை வந்தடைந்த பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்த அறிவிப்புடன், நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்நிலையில், அந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘கோ பேக் மோடி’ என்கிற நினைவுப்பரிசை அளித்ததாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Source: Twitter

Archived Link: https://archive.vn/iMHpY

Source: Twitter

Archived Link: https://archive.vn/kgziE

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இப்புகைப்படத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மை குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் இதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

உண்மையும் பின்னணியும்:

பிரதமர் மோடி தலைமையிலான ஆளும் மத்திய அரசு தமிழகத்திற்கான திட்டங்களைச் சரிவர கொண்டு சேர்ப்பதில்லை என்று தமிழகத்தைச் சேர்ந்த மக்களில் ஒரு சாரார், பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகின்ற போதேல்லாம் #GoBackModi என்கிற ஹேஷ்டேக் ஒன்றினை சமூக வலைத்தளமான டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து விடுவார்கள்.

அந்த வகையில், இந்த முறை ஒருபடி மேலே சென்று முதல்வரே ‘கோ பேக் மோடி’ என்கிற நினைவுப்பரிசு ஒன்றினை பிரதமருக்கு வழங்குவதாகப் புகைப்படம் ஒன்றினை எடிட் செய்துள்ளனர்.

ஏ.என்.ஐ வெளியிட்டிருந்த எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தின் உண்மையான வெர்ஷனை நாங்கள் இங்கே உங்களுக்காகப் பகிர்ந்துள்ளோம். உண்மையில், முதல்வர் பிரதமருக்கு கிருஷ்ணாவதாரச் சந்தனச் சிலை ஒன்றினை நினைவுப்பரிசாக அளித்துள்ளார்.

Source: Twitter

Archived Link: https://archive.vn/J85Qa

அதற்கான, சென்னை நேரு உட்விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற பிரதமர் மோடி கலந்து கொண்ட கூட்டத்தின் முழுமையான வீடியோ தொகுப்பினையும் இங்கே கொடுத்துள்ளோம். அதில், அந்த நினைவுப்பரிசு வழங்கும் காட்சி தெளிவாகத் தெரிகிறது.

Source: Twitter

Conclusion:

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடிக்கு ‘கோ பேக் மோடி’ என்கிற நினைவுப்பரிசினை வழங்கினார் என்று பரவுகின்ற புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources:

ANI: https://twitter.com/ANI/status/1360838354124742657/photo/2

PM Narendra Modi: https://youtu.be/nbOX-fafH_4

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular