சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024

HomeFact CheckPoliticsவன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்றாரா பொன்முடி?

வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்றாரா பொன்முடி?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி அவர்கள் வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று கூறியதாகக் கூறி புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று பொன்முடி கூறியதாக பரவும் புகைப்படச் செய்தி
Source: Facebook

தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 6-ஆம் தேதி நடக்கவிருக்கின்றது. இத்தேர்தலில் போட்டியிட கடந்த வெள்ளிக்கிழமை (12/03/2021) முதல் வரும் சனிக்கிழமை (20/02/2021) வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் முக்கியக் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து, பிரச்சாரம் செய்யத் துவங்கியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான க. பொன்முடி அவர்கள் திமுக சார்பில் போட்டியிடவிருக்கின்றார்.

பொன்முடி அவர்கள் தற்போது திருக்கோவிலூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் பொன்முடி அவர்கள், “வன்னியர் இடஒதுக்கீட்டை நாங்கள் ரத்து செய்வோம், எங்களுக்கு வன்னியர் வாக்கு வேண்டாம். நாங்கள் அவர்களை நம்பி கட்சி நடத்தவில்லை.“ என்று கூறியதாகக் கூறி புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது.

வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று பொன்முடி கூறியதாக பரவும் பதிவு - 1
Source: Facebook

Archive Link: https://archive.ph/Z53oq

வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று பொன்முடி கூறியதாக பரவும் பதிவு - 2
Source: Facebook

Archive Link:https://archive.ph/XH0iG

வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று பொன்முடி கூறியதாக பரவும் பதிவு - 3
Source: Facebook

Archive Link: https://archive.ph/BWARK

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

க.பொன்முடி அவர்கள் வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று கூறியதாகக் கூறி பரப்பப்படும் புகைப்படச் செய்தியைக் காணும்போதே அது போலியாக எடிட் செய்யப்பட்ட புகைப்படச் செய்திதான் என்பதை நம்மால் உணர முடிகின்றது.

ஏனெனில் பாலிமர் தொலைக்காட்சியில் வழக்கமாக  பயன்படுத்தப்படும் புகைப்படச் செய்திகளில் பயன்படுத்தப்படும் எழுத்துறு, டிசைன், லோகோ போன்றவை வைரலாகும் புகைப்படச் செய்தியில் காணப்படவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக வைரலாகும் புகைப்படச் செய்தியில் பொன்முடி அவர்களின் பெயர் தலைப்புப் பகுதியில் காணப்படுகின்றது.

பொதுவாக தலைவர்கள் ஏதேனும் ஒரு கருத்து கூறினால்,  அவர்கள் கூறிய கருத்தைப் போட்டு, அக்கருத்திற்கு கீழே அவர்களின் பெயர் போடப்படுவதே வழக்கம்.  அதை விடுத்து தலைவரின் பெயரை இவ்வாறு தலைப்பு பகுதியில், பாலிமர் தொலைக்காட்சியில் மட்டுமல்ல, வேறு எந்த ஒரு செய்தி நிறுவனமும் போட மாட்டார்கள்.

இதிலிருந்தே இப்புகைப்படச் செய்தி எடிட் செய்யப்பட்ட போலியான புகைப்படச் செய்திதான் என்பதை நம்மால் உணர முடிந்தது.

ஆயினும் இப்புகைப்படச் செய்தியை பலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவதால் இதை முறைப்படி ஆய்வு செய்து இது குறித்து விளக்க நாம் முற்பட்டோம்.

ஆய்வின் முதற்படியாக இவ்வாறு ஒரு செய்தி பாலிமர் தொலைக்காட்சியில்  வந்துள்ளதா என்பதை பாலிமர் தொலைக்காட்சியின் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.

நம் தேடலில் இவ்வாறு ஒரு செய்தி வந்ததற்கான எந்த ஆதாரமும் நமக்கு கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பாலிமர் தொலைக்காட்சியின் செய்தித் துறையினரைத் தொடர்புக் கொண்டு இதுக்குறித்துக் கேட்டோம்.

அவர்கள்,

“இதுத் தவறான செய்தி. இவ்வாறு ஒரு செய்தியை நாங்கள் வெளியிடவில்லை”

என்று நமக்கு பதிலளித்தனர்.

இதன் அடிப்படையில் பார்க்கும்போது வன்னியர் இட ஒதுக்கீடுக் குறித்து க.பொன்முடி அவர்கள் பேசியதாக பரவும் தகவல் பொய்யான ஒன்று என்பது நமக்கு தெளிவாகிறது.

Conclusion

க.பொன்முடி அவர்கள் வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று கூறியதாகக் கூறி  பரப்பப்படும் புகைப்படச் செய்தி எடிட் செய்யப்பட்டு போலியாக தயாரிக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Facebook Profile: https://www.facebook.com/permalink.php?story_fbid=1387884338226207&id=100010139611900

Facebook Profile: https://www.facebook.com/permalink.php?story_fbid=2480648025563137&id=100008538903357

Polimer News Departmet:-

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular