சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024

HomeFact Checkஸ்டாலின் மருமகன் வீட்டில் கிடைத்த பணமா இது?

ஸ்டாலின் மருமகன் வீட்டில் கிடைத்த பணமா இது?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையில்,  கட்டுக்கட்டாக பணம் கிடைத்ததாகக் கூறி புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது.

ஸ்டாலின் மருமகன் குறித்து பரவும் பதிவு - 1

Archieve Link: https://archive.ph/mYYdM

தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி வெற்றிக்கரமாக நடந்து முடிந்துவிட்டது. இத்தேர்தலில் தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு தீவிர வாகன சோதனைகளை நடத்தி, பறிமுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

இதனிடையே, வருமானவரித்துறை அதிகாரிகள் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பிரமுகர்கள் வீட்டில் சோதனை நடத்தினர். அந்த வகையில், திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை (௦2/04/2021) அன்று அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இச்சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறி புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ஸ்டாலின் மருமகன் குறித்து பரவும் பதிவு - 2

Archieve Link: https://archive.ph/hT8XW

ஸ்டாலின் மருமகன் குறித்து பரவும் பதிவு - 3

Archieve Link: https://archive.ph/LH7p4

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

வருமான வரித்துறையினர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் தகவல் பரவியதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படங்களை கூகுள் ரிவர்ஸ் சர்ச் (Google Reverse Search) முறையில் ஆய்வு செய்தோம்.  

இவ்வாறு செய்ததில் இப்புகைப்படங்களின் பின்னணியில் இருந்த உண்மைத்தன்மைக் குறித்து நம்மால் அறிய முடிந்தது. சபரீசன் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டதாக கூறி பரப்பப்படும் புகைப்படங்கள் உண்மையில் பழைய படங்களாகும்.

கடந்த 2019 ஆம் ஆண்டு வேலூரில் ஒரு சிமெண்ட் கிடங்கில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது எடுக்கப்பட்டப் புகைப்படங்களே தற்போது சபரீசன் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறி பரப்பப்பட்டு வருகின்றது.

இதுக்குறித்தச் செய்தி நியூஸ் 18 தமிழ், தி ஃபெடரல் உள்ளிட்ட செய்தி இணையத்தளங்களில் வெளிவந்திருந்தது.

மேற்கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படங்கள் தவறானது என்பது நிருபணமாகின்றது.

Conclusion

திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையில்,  கட்டுக்கட்டாக பணம் கிடைத்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட புகைப்படங்கள் தவறானது என்பதையும், அப்புகைப்படங்கள் உண்மையில்  2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழையப் புகைப்படங்கள் என்பதையும் உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.  

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

News 18 Tamil: https://tamil.news18.com/photogallery/tamil-nadu/in-a-private-cement-godown-in-vellore-heaps-of-money-has-been-seized-vi-133359.html

The Federal: https://thefederal.com/states/south/tamil-nadu/it-sleuths-continue-to-raid-dmk-mens-house-and-residence/


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular