Politics
திமுகவின் தேர்தல் அறிக்கை சிறப்பாக உள்ளது என்றாரா சீமான்?
திமுகவின் தேர்தல் அறிக்கை சிறப்பாக உள்ளதென்றும், அவற்றை செயல்படுத்தினால் தங்கள் கட்சியே தமிழகத்திற்கு தேவையில்லை என்றும் சீமான் அவர்கள் கூறியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. தமிழகத்தின் முக்கியக் கட்சிகளுள் ஒன்றான திமுக கடந்த சனிக்கிழமை (13/03/2021) அன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டது.
இந்த அறிக்கையானது மொத்தம் 128 பக்கங்கள் கொண்டுள்ளது. ஏறக்குறைய 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல கட்சியைச் சார்ந்த தலைவர்கள் இந்த அறிக்கையை விமர்சித்து வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இந்த அறிக்கையைக் குறித்து விமர்சித்ததாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வலம் வருகின்றது.
“திமுகவின் தேர்தல் அறிக்கை சிறப்பாக உள்ளது. தமிழர்களுக்கான பல நல்ல திட்டங்கள் அதில் உள்ளன; தேர்தல் அறிக்கைஅறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை செயல்படுத்தினால் எங்கள் கட்சியே தமிழகத்திற்கு தேவையில்லை.” என்று சீமான் அவர்கள் கூறியதாக அப்புகைப்படச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Archive Link:https://archive.ph/9m7Jc

Archive Link:https://archive.ph/PZLn0

Archive Link:https://archive.ph/01PDE
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படச் செய்தியில் குறிப்பிட்டிருப்பதுபோல் திமுக தேர்தல் அறிக்கை குறித்து சீமான் அவர்கள் பாராட்டி பேசினாரா என்பதை அறிய வைரலாகும் புகைப்படச் செய்தியை கூகுள் ரிவர்ஸ் சர்ச் (Google Reverse Search) முறையில் ஆய்வு செய்தோம்.
இவ்வாறு செய்ததில் இதன் பின்னணியில் இருந்த உண்மைத்தன்மை குறித்து நம்மால் அறிய முடிந்தது. உண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படச் செய்தி எடிட் செய்யப்பட்ட போலியான ஒன்றாகும்.
சீமான் அவர்கள் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில்,
“நாங்கள் தனித்தே போட்டியிட பழகியவர்கள்; யாருடைய கொள்கை, கோட்பாடுகளையும் ஏற்று கொள்ளாதவர்கள், நாங்கள் அதனால் தனித்தே போட்டியிடுகிறோம்.”
என்று பேசியிருந்தார்.
இந்த விஷயம் நியூஸ் 7 தொலைக்காட்சியின் சமூக வலைத்தளப் பக்கங்களில் புகைப்படச் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது.
இந்த புகைப்படச் செய்தியே எடிட் செய்யப்பட்டு சீமான் அவர்கள் திமுகவின் தேர்தல் அறிக்கையைப் பாராட்டிப் பேசியதாக சமூக வலைத்தளப் பக்கங்களில் பரப்பப்படுகின்றது.
வாசகர்கர்களின் புரிதலுக்காக உண்மையானப் புகைப்படச் செய்தியையும் எடிட் செய்யப்பட்டப் புகைப்படச் செய்தியையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Conclusion
திமுகவின் தேர்தல் அறிக்கை சிறப்பாக உள்ளதென்றும், அவற்றை செயல்படுத்தினால் தங்கள் கட்சியே தமிழகத்திற்கு தேவையில்லை என்றும் சீமான் அவர்கள் கூறியதாக பரப்பப்படும் புகைப்படச் செய்தி எடிட் செய்யப்பட்டு போலியாக உருவாக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Manipulated Media
Our Sources
Facebook Profile: https://www.facebook.com/permalink.php?story_fbid=937256210435639&id=100024538062128
Facebook Profile: https://www.facebook.com/permalink.php?story_fbid=1682941321908776&id=100005787737715
News 7 Tamil: https://twitter.com/news7tamil/status/1370700523213516802
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)