புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024
புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024

HomeFact Check300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதியானவர் உயிருடன் உள்ளாரா?

300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதியானவர் உயிருடன் உள்ளாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதியான சித்தர் உயிருடன் உள்ளதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதியான சித்தர் உயிருடன் உள்ளதாக பரவும் தகவல்
Screenshot from Twitter @ananthamharshi
300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதியான சித்தர் உயிருடன் உள்ளதாக பரவும் தகவல் - 01
Screenshot from Facebook /iso.mannadurai
300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதியான சித்தர் உயிருடன் உள்ளதாக பரவும் தகவல் - 03
Screenshot from Facebook / ravi.raman.520357

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ராகுல் காந்தியின் செல்வாக்கு மற்ற தேசியத் தலைவர்களை காட்டிலும் அதிகரித்துள்ளது என்று டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு வெளியிட்டதா?

Fact Check/Verification

300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதியானவர் உயிருடன் உள்ளதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். நம் ஆய்வில் வீடியோவில் காணப்படும் இந்த சம்பவம் வள்ளியூரில் நடந்ததாக ஒரு சாராரும், வடலூரில் நடந்ததாக ஒரு சாராரும் பரப்பி வருவதை காண முடிந்தது.

மேலும் வள்ளியூரில் நடந்ததாக குறிப்பிடப்படும் இதே தகவலை வேறொரு வீடியோவுடன் இணைத்து பரப்பப்படுவதையும் நம்மால் காண முடிந்தது. அதை  நியூஸ்செக்கர் சார்பில் ஏற்கனவே ஆய்வு செய்து அது பொய்யான தகவல் என்று நிரூபித்து கட்டுரையும் வெளியிட்டிருந்தோம். அதை இங்கே படிக்கலாம்.

இதனைத் தொடர்ந்து இதே தகவலுடன் வேறொரு வீடியோ பரவுவதால் இதுக்குறித்து தேடினோம். இத்தேடலில் வீடியோவில் ஜீவசமாதி குறித்து விளக்கும் நபரின் பெயர் கோதண்டவேலு என்பதையும், அவர் சென்னை சித்த வித்தை அப்பியாச நிலையத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிய வந்தது.

அவரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் வீடியோ குறித்து விசாரித்ததில், வீடியோவில் ஜீவசமாதி நிலையில் இருப்பவர் ஒரு ஆட்டோ டிரைவர் என்றும், அவர் கடந்த சில ஆண்டுகளாகவே அவர்களிடம் பயிற்சி எடுத்து வருபவர் என்றும், அவர் கடந்த மாதம் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது உடல் ஜீவசமாதி முறையில் அடக்கம் செய்யப்பட்டது என்பதையும் அறிய முடிந்தது. அதேபோல் இந்த ஜீவசமாதி நிகழ்வானது சென்னை பெரும்பாக்கத்தில் நடந்ததுள்ளது என்பதையும் அறிய முடிந்தது.

சித்த வித்தை அப்பியாச நிலையம் ஒரு ஆன்மீக நிறுவனமாகும். இந்நிலையத்தின் சார்பாக பலரை ஜீவசமாதி வைத்துள்ளனர். இதுக்குறித்த வீடியோக்களை அவர்களது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் காண முடிகின்றது.

Also Read: அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானியை இந்தியப் பிரதமர் என்று செய்தி வெளியிட்டதா சன் நியூஸ்?

Conclusion

300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதியான சித்தர் உயிருடன் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

வீடியோவில் ஜீவசமாதி நிலையில் உள்ளவர் ஒரு மாதங்களுக்கு முன்பு வரை ஆட்டோ டிரைவராக இருந்தவர். அதேபோல் வீடியோவில் காணப்படும் இச்சம்பவம் வடலூரிலோ, வள்ளியூரிலோ நிகழவில்லை. சென்னையில் நடந்துள்ளது.   

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Phone Conversation with Gothanndavelu, Chennai Siddha Viddhai Abhiyasya Nilayam.


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular