வியாழக்கிழமை, மார்ச் 28, 2024
வியாழக்கிழமை, மார்ச் 28, 2024

HomeFact Check‘தமிழகத்தை ஆண்ட கடைசி அதிமுக முதலமைச்சர் நான்தான்’ என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘தமிழகத்தை ஆண்ட கடைசி அதிமுக முதலமைச்சர் நான்தான்’ என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

தமிழகத்தை ஆண்ட கடைசி அதிமுக முதலமைச்சர் நான்தான் என்று தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.

தமிழகத்தை ஆண்ட கடைசி அதிமுக முதலமைச்சர் நான்தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 01

“செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா மேடையில் என் பெயரை இருட்டடிப்பு செய்யலாம். ஆனால் அதிமுக என்ற பேரியக்கத்தின் சார்பாக தமிழகத்தை ஆட்சி செய்த கடைசி முதலமைச்சர் நான்தான் என்கிற வரலாற்றை மாற்றி எழுத முடியாது” என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தமிழகத்தை ஆண்ட கடைசி அதிமுக முதலமைச்சர் நான்தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 02

Twitter Link | Archive Link

தமிழகத்தை ஆண்ட கடைசி அதிமுக முதலமைச்சர் நான்தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 03

Facebook Link

தமிழகத்தை ஆண்ட கடைசி அதிமுக முதலமைச்சர் நான்தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 04

Facebook Link

Also Read: பிரசவத்தின்போது உயிரிழந்த பெண்ணை கண்டு மருத்துவர் கண்ணீர் சிந்தியதாக பரவும் தகவல் உண்மையானதா?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

தமிழகத்தை ஆண்ட கடைசி அதிமுக முதலமைச்சர் நான்தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

முன்னதாக பழனிச்சாமி இவ்வாறு கூறினாரா என்பதை தெளிவு செய்ய அவரது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்கள், அதிமுகவின் சமூக ஊடகப் பக்கங்கள், மற்றும் பொது ஊடகங்களை ஆய்வு செய்தோம். இதில் எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு பேசியதாக எந்த தரவும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டை கூர்மையாக ஆய்வு செய்ததில், அந்த நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிந்தது.

தமிழகத்தை ஆண்ட கடைசி அதிமுக முதலமைச்சர் நான்தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

இதனையடுத்து ஜூனியர் விகடனின் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம். இதில் இந்நிறுவம்‘திமுக ஆட்சியில் ரூ20,000 கோடி சுருட்டல்!’ எனும் தலைப்பிட்டு நியூஸ்கார்ட் ஒன்றை வெளியிட்டிருந்தை காண முடிந்தது.

இந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே வைரலாகும் நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை உணர முடிந்தது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனையடுத்து விகடனின் ஆசிரியர் குழுவில் ஒருவரான ஐ.பிரிட்டோவைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்ததில், “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது” என்பதை அவரும் உறுதி செய்தார்.

Also Read: 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அரசுக்கு 2.8 லட்சம் கோடி இழப்பு என்று செய்தி வெளியிட்டதா டைம்ஸ் ஆஃப் இந்தியா?

Conclusion

தமிழகத்தை ஆண்ட கடைசி அதிமுக முதலமைச்சர் நான்தான் என்று தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.       

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

Result: Altered

Sources

Junior Vikatan’s Tweet, tweeted on 09/08/2022
Phone Conversation with I.Britto, Vikatan, on 12/08/2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular