வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024

HomeFact CheckViralசரக்கு ரயில் காணவில்லை என்று ஊடகங்கள் வெளியிட்ட பொய் செய்தி!

சரக்கு ரயில் காணவில்லை என்று ஊடகங்கள் வெளியிட்ட பொய் செய்தி!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

நாக்பூரிலிருந்து மும்பைக்கு சுமார் 90 கண்டெய்னர்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் 13 நாட்களாக காணவில்லை என்று ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.

 நாக்பூரிலிருந்து மும்பைக்கு சுமார் 90 கண்டெய்னர்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் 13 நாட்களாக காணவில்லை என்று ஊடகங்களில் வந்தச் செய்தி
Screengrab from Twitter@DinakaranNews
 நாக்பூரிலிருந்து மும்பைக்கு சுமார் 90 கண்டெய்னர்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் 13 நாட்களாக காணவில்லை என்று ஊடகங்களில் வந்தச் செய்தி
Screengrab from Twitter@thatsTamil/

ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: வேலுப்பிள்ளை பிரபாகரனின் தற்போதைய புகைப்படம் என்று பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!

Factcheck / Verification

நாக்பூரிலிருந்து மும்பைக்கு சுமார் 90 கண்டெய்னர்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் 13 நாட்களாக காணவில்லை என்று ஊடகங்களில் செய்தி வந்ததை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். அதில் இத்தகவல் தவறானது என்பதை அறிய முடிந்தது.

மத்திய ரயில்வே ஊடகங்கள் வெளியிட்ட இச்செய்தி பொய்யானது என மறுப்பு தெரிவித்துள்ளது.

ரயில்வே வெளியிட்ட செய்தியில்,  

90 கண்டெய்னர்களை நாக்பூரிலிருந்து மும்பை ஏற்றி வந்த சரக்கு ரயில் பிப்ரவரி 5 அன்று மகாராஷ்ட்ராவின் புசவால் மாவட்டத்தில் உள்ள ஷேகாவ்ன் ரயில்நிலையத்தை அடைந்தது. செய்தியில் வந்தது போல் கண்டெய்னர் காணாமல் போகவில்லை. அவை நவி மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டது

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நாக்பூரிலிருந்து மும்பைக்கு சுமார் 90 கண்டெய்னர்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் 13 நாட்களாக காணவில்லை என்று ஊடகங்களில் வந்தச் செய்தி
Central Railway’s Clarification

மத்திய ரயில்வேயின் டிவிட்டர் பக்கத்திலும் இதுக்குறித்து டிவீட் செய்யப்பட்டுள்ளது.

Also Read: பிரபாகரன் என் நெஞ்சில் தூங்குவார் என்று சீமான் கூறியதாக பரவும் எடிட் வீடியோ!

Conclusion

நாக்பூரிலிருந்து மும்பைக்கு சுமார் 90 கண்டெய்னர்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் 13 நாட்களாக காணவில்லை என்று ஊடகங்களில் வந்தச் செய்தி தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Tweet from @Central_Railway dated February 14, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular