வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024
வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024

HomeFact Checkஇஸ்லாமிய மத உடை அணிந்து கேரள அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுனர்; வைரலாகும் தகவல் உண்மையானதா?

இஸ்லாமிய மத உடை அணிந்து கேரள அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுனர்; வைரலாகும் தகவல் உண்மையானதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

இஸ்லாமிய மத உடை அணிந்து ஓட்டுனர் ஒருவர் கேரள அரசுப் பேருந்தை இயக்கியதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இஸ்லாமிய மத உடை அணிந்து ஓட்டுனர் ஒருவர் கேரள அரசுப் பேருந்தை இயக்கியதாக பரவும் படம்

கேரள அரசு பேருந்துகளில் ஓட்டுர்கள் பணிபுரியும்போது  நீல நிற பேண்டும், இள நீல நிற சட்டையும் சீரூடையாக அணிந்திருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் இதற்கு மாறாக இஸ்லாமிய உடையாக கருதப்படும் வெள்ளை நிற குர்தா மற்றும் சட்டையுடன், தலையில் இஸ்லாமியர்கள் அணியும் குல்லாவை அணிந்துக் கொண்டு ஓட்டுனர் ஒருவர் அரசுப் பேருந்தை இயக்கியதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இஸ்லாமிய மத உடை அணிந்து ஓட்டுனர் ஒருவர் கேரள அரசுப் பேருந்தை இயக்கியதாக பரவும் தகவல் - 1

Twitter Link | Archive Link

இஸ்லாமிய மத உடை அணிந்து ஓட்டுனர் ஒருவர் கேரள அரசுப் பேருந்தை இயக்கியதாக பரவும் தகவல் - 2

Facebook Link

இஸ்லாமிய மத உடை அணிந்து ஓட்டுனர் ஒருவர் கேரள அரசுப் பேருந்தை இயக்கியதாக பரவும் தகவல் - 3

Facebook Link


Also Read:
 குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை அவமதித்தாரா ஜோ பைடன்?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

இஸ்லாமிய மத உடை அணிந்து ஓட்டுனர் ஒருவர் கேரள அரசுப் பேருந்தை இயக்கியதாக கூறி புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து, இதன் உண்மைத்தன்மை குறித்து அறிய கேரள அரசுப் போக்குவரத்து கழகத்தின் (KSRTC) தலைவர் பிஜு பிரபாகரனை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டோம்.

வைரலாகும் புகைப்படம் குறித்து அவரிடம் விசாரிக்கையில், இச்சம்பவம் குறித்து அவர்கள் வெளியிட்ட செய்தி வெளியீட்டை நம்முடன் பகிர்ந்துக் கொண்டார்.

“வைரலாகும் படத்தில் இருப்பவர் பெயர் பி.ஹெச். அஷ்ரஃப், இவர் மாவேலிக்கரை பேருந்து யூனிட்டை சேர்ந்தவராவார்.  இவர் திருவனந்தபுரம் – மாலிவேக்கரை ரூட்டில்  பேருந்து ஓட்டிக் கொண்டிருக்கும்போது இப்படம் எடுக்கப்பட்டுள்ளது” என்று அந்த செய்தி வெளியீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

“KSRTC-யின் விசாரனை பிரிவினர் இதுக்குறித்து விசாரித்ததில் அஷ்ரஃப் சீருடை விதிகளை மீறவில்லை என்று தெரிய வந்துள்ளது. அஷ்ரஃப் சீருடை அழுக்குப்பட கூடாது என்று தோர்த்து எனப்படும் வெள்ளை நிற துண்டை மடியில் போட்டுள்ளார். இதை ஒரு கோணத்தில் பார்க்கும்போது இஸ்லாமிய உடை போன்று தோற்றமளித்துள்ளது. வைரலாகும் படத்தை கூர்மையாக உற்று நோக்கியதில் KSRTC-யின் சீருடையான இளம் நீல நிற முழுக்கை சட்டையும்,  நீல நிற பேண்டையையுமே அஷ்ரஃப் அணிந்துள்ளார் என்பதை அறிய முடிகின்றதுஎன்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையானது KSRTC-யின் சமூக ஊடகப் பக்கங்களில் பகிரப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இச்சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுநர் அஷ்ரஃபை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு பேசியதில், நான் அன்று சீருடையில்தான் இருந்தேன். இதுக்குறித்து நிர்வாகத்தினர் என்னிடம் கேட்கும்போதும் தெளிவுப்படுத்தி விட்டேன் என்று பதிலளித்தார்.


Also Read:
 கர்நாடக அரசு லூலூ ஒப்பந்தத்தை கைவிடாவிட்டால் சட்டப்பேரவையை முற்றுகையிடுவோம் என்றாரா அண்ணாமலை?

Conclusion

இஸ்லாமிய மத உடை அணிந்து ஓட்டுனர் ஒருவர் கேரள அரசுப் பேருந்தை இயக்கியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

Result: False Context/Missing Context

Sources

Press release issued by KSRTC CMD’s Office on 25th May 2022
KSRTC Social Media Post on 25th May 2022
Telephone Conversation with KSRTC Driver P H Ashraf

(இந்த செய்தியானது நியூஸ்செக்கர் மலையாளத்தில் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டுள்ளது, மலையாளப் பிரிவினரின் உதவியுடனே இச்செய்திக்குரிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது)


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular