வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024

HomeFact Checkஇந்திய எல்லையில் எலுமிச்சை, மிளகாயை கட்டினாரா ராஜ்நாத் சிங்?

இந்திய எல்லையில் எலுமிச்சை, மிளகாயை கட்டினாரா ராஜ்நாத் சிங்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய எல்லையில் எலுமிச்சை மற்றும் மிளகாயை கட்டியதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ராஜ்நாத் சிங் இந்திய எல்லையில் எலுமிச்சை மற்றும் மிளகாயை கட்டியதாக பரவும் புகைப்படம்

இப்படத்தை திமுகவின் சட்டமன்ற உறுப்பினரும், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளரருமான டி.ஆர்.பி ராஜா உட்பட பலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ராஜ்நாத் சிங் இந்திய எல்லையில் எலுமிச்சை மற்றும் மிளகாயை கட்டியதாக பரவும் புகைப்படம் - 01
Screenshot from Twitter @TRBRajaa
ராஜ்நாத் சிங் இந்திய எல்லையில் எலுமிச்சை மற்றும் மிளகாயை கட்டியதாக பரவும் புகைப்படம் - 02
Screenshot from Twitter @rajlingam78
ராஜ்நாத் சிங் இந்திய எல்லையில் எலுமிச்சை மற்றும் மிளகாயை கட்டியதாக பரவும் புகைப்படம் - 0
Screenshot from Facebook / haideralia

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தாயின் மறைவிற்குப் பின் இந்து சமய முறைப்படி தனது தலையை மொட்டை அடித்துக் கொண்டாரா பிரதமர் மோடி?

Fact Check/Verification

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய எல்லையில் எலுமிச்சை மற்றும் மிளகாயை கட்டியதாக  கூறி புகைப்படம் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்த உண்மையை அறிய அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம்.

இத்தேடலானது நியூஸ் 18 இணையத்தளத்திற்கு நம்மை அழைத்துச் சென்றது. இத்தளத்தில் அக்டோபர் 09, 2019 அன்று PICS: Rajnath Singh Performs ‘Shastra Puja’ of Rafale Fighter Jet என்று தலைப்பிட்டு, அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஃபேல் ஜெட் விமானத்திற்கு பூஜை செய்யும் படங்களை வெளியிடப்பட்டிருந்தது. இதில் முதல்  படத்தை எடிட் செய்தே வைரலாகும் புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.  

ராஜ்நாத் சிங் இந்திய எல்லையில் எலுமிச்சை மற்றும் மிளகாயை கட்டியதாக பரவும் புகைப்படம் - 04
Sceengrab from News18.com

ராஜ்நாத் சிங் ரஃபேல் விமானத்திற்கு பூஜை செய்தது குறித்து அச்சமயத்தில் பல ஊடகங்களில் செய்தி வந்திருந்தது. அவற்றை இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

ராஜ்நாத் சிங்கும் அவரது டிவிட்டர் பக்கத்தில் இந்நிகழ்வு குறித்து டிவீட் செய்துள்ளார்.

கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது தெளிவாகின்றது.

Also Read: 2022ஆம் ஆண்டின் ஆசியாவின் மிக மோசமான நாணயமாக இடம் பிடித்துள்ளதா இந்திய ரூபாய்? உண்மை என்ன?

Conclusion

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய எல்லையில் எலுமிச்சை மற்றும் மிளகாயை கட்டியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Sources

Article from News 18 dated October 9, 2019
Tweet from @rajnathsingh dated October 8, 2019


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular