Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய எல்லையில் எலுமிச்சை மற்றும் மிளகாயை கட்டியதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இப்படத்தை திமுகவின் சட்டமன்ற உறுப்பினரும், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளரருமான டி.ஆர்.பி ராஜா உட்பட பலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தாயின் மறைவிற்குப் பின் இந்து சமய முறைப்படி தனது தலையை மொட்டை அடித்துக் கொண்டாரா பிரதமர் மோடி?
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய எல்லையில் எலுமிச்சை மற்றும் மிளகாயை கட்டியதாக கூறி புகைப்படம் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்த உண்மையை அறிய அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம்.
இத்தேடலானது நியூஸ் 18 இணையத்தளத்திற்கு நம்மை அழைத்துச் சென்றது. இத்தளத்தில் அக்டோபர் 09, 2019 அன்று PICS: Rajnath Singh Performs ‘Shastra Puja’ of Rafale Fighter Jet என்று தலைப்பிட்டு, அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஃபேல் ஜெட் விமானத்திற்கு பூஜை செய்யும் படங்களை வெளியிடப்பட்டிருந்தது. இதில் முதல் படத்தை எடிட் செய்தே வைரலாகும் புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ராஜ்நாத் சிங் ரஃபேல் விமானத்திற்கு பூஜை செய்தது குறித்து அச்சமயத்தில் பல ஊடகங்களில் செய்தி வந்திருந்தது. அவற்றை இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
ராஜ்நாத் சிங்கும் அவரது டிவிட்டர் பக்கத்தில் இந்நிகழ்வு குறித்து டிவீட் செய்துள்ளார்.
கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது தெளிவாகின்றது.
Also Read: 2022ஆம் ஆண்டின் ஆசியாவின் மிக மோசமான நாணயமாக இடம் பிடித்துள்ளதா இந்திய ரூபாய்? உண்மை என்ன?
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய எல்லையில் எலுமிச்சை மற்றும் மிளகாயை கட்டியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Article from News 18 dated October 9, 2019
Tweet from @rajnathsingh dated October 8, 2019
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
November 26, 2025
Ramkumar Kaliamurthy
February 14, 2023
Vijayalakshmi Balasubramaniyan
August 4, 2025