டாஸ்மாக் கடைகளில் தீபாவளிக்கு ₹600 கோடி மது விற்க இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.
பண்டிகை என்று வந்துவிட்டாலே தமிழகத்தில் டாஸ்மாக் மது கடைகளில் விற்பனை அதிகளவில் இருப்பது வழக்கமானதாகும். இந்த வகையில் இவ்வருடம் தீபாவளிக்கு ₹600 கோடிக்கு மது விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழ அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை மாற்றி ஆணை வெளியிடுகிறாரா பிரதமர்?
Fact Check/Verification
டாஸ்மாக் கடைகளில் தீபாவளிக்கு ₹600 கோடி மது விற்க இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்ததை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். அதில் இத்தகவல் தவறானது என்பதை அறிய முடிந்தது.
₹600 கோடி மது விற்க இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக தந்தி தொலைக்காட்சி வெளியிட்ட செய்திக்கு மதுவிலக்கு துறை அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜி மறுப்பு தெரிவித்து, “அன்பான @thanthitv எந்த இலக்கும் நிர்ணயிக்கவில்லை.. தவறான செய்திகளை பதிவிட வேண்டாமே.. நன்றி..” என்று டிவீட் செய்திருந்ததை காண முடிந்தது. இதனைத் தொடர்ந்து தந்தி தொலைக்காட்சி அச்செய்தியை நீக்கியுள்ளதையும் காண முடிகின்றது.
இதனடிப்படையில் பார்க்கையில் தீபாவளிக்கு ₹600 கோடிக்கு மது விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழ அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஊடகங்களில் வந்த செய்தி தவறானது என்பது தெளிவாகின்றது.
Conclusion
டாஸ்மாக் கடைகளில் தீபாவளிக்கு ₹600 கோடி மது விற்க இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வந்த செய்தி தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரத்தின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
Tweet, from Senthil Balaji, TN Minister, on October 16, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)