Sunday, March 16, 2025

Fact Check

சென்னையில் கழிவுநீர் வடிகால் மேல் கட்டப்பட்டிருந்த பிளாட்ஃபார்ம் உடைந்து 5 பேர் சாக்கடைக்குள் விழுந்ததாக பரவும் வீடியோ உண்மையானதா?

banner_image

சென்னையில் கழிவுநீர் வடிகால் மேல் கட்டப்பட்டிருந்த பிளாட்ஃபார்ம் உடைந்து 5 பேர் சாக்கடைக்குள் விழுந்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சென்னையில் கழிவுநீர் வடிகால் மேல் கட்டப்பட்டிருந்த பிளாட்ஃபார்ம் உடைந்து 5 பேர் சாக்கடைக்குள் விழுந்ததாக பரவும் தகவல்

“சென்னையில் உங்கள் கடைக்கு முன்பு புதிதாக கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பிளாட்பாரத்தை கவனமாக பயன்படுத்தவும். ஏனென்றால் இந்த கட்டுமானம் திராவிட மாடல் அரசால் கட்டப்படுகிறது“ என தலைப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சென்னையில் கழிவுநீர் வடிகால் மேல் கட்டப்பட்டிருந்த பிளாட்ஃபார்ம் உடைந்து 5 பேர் சாக்கடைக்குள் விழுந்ததாக பரவும் தகவல் -01
Screenshot from Facebook / jagan.dmk.5
சென்னையில் கழிவுநீர் வடிகால் மேல் கட்டப்பட்டிருந்த பிளாட்ஃபார்ம் உடைந்து 5 பேர் சாக்கடைக்குள் விழுந்ததாக பரவும் தகவல் -02
Screenshot from Facebook / pm.karthikeyan.372
சென்னையில் கழிவுநீர் வடிகால் மேல் கட்டப்பட்டிருந்த பிளாட்ஃபார்ம் உடைந்து 5 பேர் சாக்கடைக்குள் விழுந்ததாக பரவும் தகவல் -03
Screenshot from Facebook / Rajeswariv Viswanathan 

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கர்நாடகாவில் நுழைந்தவுடன் இந்துக்கள் உடைக்கு மாறினாரா ராகுல் காந்தி?

Fact Check/Verification

சென்னையில் கழிவுநீர் வடிகால் மேல் கட்டப்பட்டிருந்த பிளாட்ஃபார்ம் உடைந்து 5 பேர் சாக்கடைக்குள் விழுந்ததாக வீடியோ ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, இதன் உண்மைத்தன்மை குறித்து அறிய, அவ்வீடியோவை தனித்தனி கீ ஃபிரேம்களாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம்.

இத்தேடலில் வைரலாகும் சம்பவம் சென்னையில் நடந்தது அல்ல, ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சல்மர் பகுதியில் நடந்தது என்பதை அறிய முடிந்தது. வைரலாகும் வீடியோவின் வலது ஓரத்தின் மேற்புறத்தில்  ‘ஏபிபி லைவ்’ என்கிற லோகோ இருப்பதை காண முடிந்தது. இதனை அடிப்படையாக வைத்து தேடுகையில், ‘Five Men Fall Into Covered Manhole In Rajasthan’s Jaisalmer, Video Goes Viral’ என்று தலைப்பிட்டு ஏபிபி லைவ் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

சென்னையில் கழிவுநீர் வடிகால் மேல் கட்டப்பட்டிருந்த பிளாட்ஃபார்ம் உடைந்து 5 பேர் சாக்கடைக்குள் விழுந்ததாக பரவும் தகவல் -03
Source: ABP Live

இச்சம்பவம் குறித்து மேலும் சில ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அதை இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு நாட்டின் பிறவேறு பகுதிகளில் நடந்த சம்பவங்கள், திமுக ஆட்சி பொறுப்பு ஏற்பதற்கு முன் நடந்த சம்பவங்கள் என பல சம்பவங்கள் திமுக ஆட்சியில் நடந்ததாக கூறி  சமூக வலைத்தளங்கள் அடிக்கடி பரவி வருவதை நம்மால் காண முடிகின்றது. அவற்றில் சிலவற்றை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்து அவை பொய்யானவை என்றும் நிரூபித்துள்ளோம்.

  1. திமுக ஆட்சியில் ரேஷன் அரிசியை சாக்கடையில் கொட்டி மீண்டும் அள்ளுவதாக பரவும் காணொளி!
  2. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்குப் பின் அமைக்கப்பட்ட சாலையின் நிலை என்று கிண்டலுக்கு உள்ளாகும் தவறான புகைப்படத் தகவல்!
  3. திமுக ஆட்சியில் அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?
  4. விநாயகர் சிலைகளை குப்பை வண்டியில் பறிமுதல் செய்ததா திமுக அரசு?

இந்த பொய் தகவல்களின் தொடர்ச்சியாக ராஜஸ்தானில் நடந்த மேற்கண்ட சம்பவத்தை தமிழகத்தில் நடந்ததாக கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர் என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

Conclusion

சென்னையில் கழிவுநீர் வடிகால் மேல் கட்டப்பட்டிருந்த பிளாட்ஃபார்ம் உடைந்து 5 பேர் சாக்கடைக்குள் விழுந்ததாக பரவும் தகவல் தவறானது என்பதையும், உண்மையில் இச்சம்பவம் ராஜஸ்தானின் ஜெய்சல்மர் பகுதியில் நடந்தது என்பதையும் உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Also Read: பெண்கள் விரும்பினால் இலவசப் பேருந்துகளில் பணத்தை தந்து டிக்கெட் பெறலாம் என்றதா போக்குவரத்து கழகம்?

Result: Missing Context

Sources

Article, from ABP Live on April 13, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,450

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.