செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30, 2024
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30, 2024

HomeFact Checkகிரிக்கெட் வீரர் தோனி கைகளில் அம்பேத்கரின் புத்தகம் என்று பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!

கிரிக்கெட் வீரர் தோனி கைகளில் அம்பேத்கரின் புத்தகம் என்று பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: கிரிக்கெட் வீரர் தோனி கைகளில் அம்பேத்கர் புகைப்படம்.

Fact: வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

கிரிக்கெட் வீரர் தோனி தனது கைகளில் அம்பேத்கரின் புத்தகத்தை வைத்திருந்ததாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

மும்பையில் சிஎஸ்கே வீரர் மகேந்திர சிங் தோனி தனது கைகளில் அம்பேத்கரின் Annihilation of Caste என்கிற புத்தகத்தை வைத்திருந்ததாக புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கிரிக்கெட் வீரர் தோனி
Screenshot from Twitter Twitter @kanagprem

Archived Link

Screenshot from Facebook/Bala Bala

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ‘நான் வெற்றி பெற்ற பாஜக காரியகர்த்தா’ என்று அண்ணாமலைக்கு கிண்டலாக பதிலளித்தாரா ரவீந்திர ஜடேஜா?

Fact Check/Verification

 கிரிக்கெட் வீரர் தோனி தனது கைகளில் அம்பேத்கரின் புத்தகத்தை வைத்திருந்ததாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.  

வைரலாகும் புகைப்படம் புதியதலைமுறையின் நியூஸ்கார்டாக பரவி வருகின்ற நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம். அவர்கள் வெளியிட்டுள்ள உண்மையான நியூஸ்கார்டில் கிரிக்கெட் வீரர் தோனி தனது கைகளில் பகவத்கீதையை வைத்திருக்கும் புகைப்படமே இடம் பெற்றுள்ளது.

மும்பையில் தோனி கைகளில் பகவத் கீதையுடன் இருக்கும் புகைப்படத்தை ABP News உள்ளிட்ட பல்வேறு செய்தி நிறுவனங்களும் வெளியிட்டுள்ளன. அச்செய்தியை வெளியிட்டுள்ள மேலும் சில ஊடகங்களின் பதிவை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணுங்கள். கிரிக்கெட் ரசிகர்களும் அவரது கைகளில் பகவத் கீதையை வைத்திருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து புதியதலைமுறை டிஜிட்டல் பொறுப்பாளர் இவானியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “தோனி கைகளில் உள்ள பகவத் கீதை புத்தகம் எடிட் செய்யப்பட்டு பரவுகிறது” என்று விளக்கமளித்தார்.

Original Image
Altered Image

Also Read: ஹேர் டிரையர் மற்றும் அயர்ன் பாக்ஸ் மூலமாக காய வைக்கப்பட்டதா அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம்?

Conclusion

கிரிக்கெட் வீரர் தோனி தனது கைகளில் அம்பேத்கரின் புத்தகத்தை வைத்திருந்ததாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Our Sources
Facebook Post From, Puthiyathalaimurai, Dated June 01, 2023

Tweet from, Mufaddal Vohra, Dated June 01, 2023
Phone Conversation With, Ivani, Puthiyathalaimurai Digital, Dated June 02, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular