புதன்கிழமை, அக்டோபர் 2, 2024
புதன்கிழமை, அக்டோபர் 2, 2024

HomeFact Checkபெங்களூருவில் கோலத்தை அழித்த பெண் வேற்று மதத்தவர் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

பெங்களூருவில் கோலத்தை அழித்த பெண் வேற்று மதத்தவர் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: பெங்களூருவில் கோலத்தை அழித்தவர் வேற்றுமதப்பெண்

Fact: குறிப்பிட்ட பெண்மணி சிமி நாயர் என்கிற இந்துப்பெண் ஆவார்.

பெங்களூருவில் ஓணத்தன்று குடியிருப்பில் போடப்பட்ட அத்தப்பூ கோலத்தை அழித்த பெண் இஸ்லாமிய அல்லது கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”பெங்களுரில் நடந்த ஒரு சம்பவம். 1000 இந்துக்கள் வாழும் இடத்தில் முஸ்லீம் கிருஸ்தவ குடும்பம் விருப்பம் போல தன் மதசம்பிராதயப்படி வாழமுடியும் அதே 100 கிருஸ்தவ முஸ்லீம் வாழும் இடத்தில் இந்துக்களால் தன் சம்பிரதாயப்படி வாழவே முடியாது ஒருவன் சாத்தான் என்பான் ஒருவன் கபீர்கள் என்பான்” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.

Screenshot from X @NaMo_Bharathan

X Link/Archived Link

Screenshot from X @Neela_BJP1

X Link/Archived Link

Screenshot from X @TK_TUTICORIN

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பழனி பஞ்சாமிர்தத்திற்கும் இஸ்லாமியர்களால் நடத்தப்படும் நிறுவனம் நெய் வழங்குவதாகப் பரவும் பொய்!

Fact Check/Verification

பெங்களூருவில் ஓணத்தன்று போடப்பட்ட அத்தப்பூ கோலத்தை அழித்த பெண் இந்து அல்லாத வேற்று மதத்தைச் சேர்ந்தவர் என்று பரவும் தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோ குறித்து கீ-வேர்டுகள் மூலமாக ஆராய்ந்தபோது அச்சம்பவம் குறித்து வெளியாகிய செய்திகள் நமக்குக் கிடைத்தன. அதன்படி, பெங்களூரு Monarch Serenity அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் பலர் இணைந்து ஓணத்தை முன்னிட்டு அத்தப்பூ கோலம் போட்டிருந்த நிலையில் அதே குடியிருப்பில் வசிப்பவரான சிமி நாயர் என்பவர் இந்த கோலத்தை அழித்துள்ளார். இதுகுறித்த மேலும் செய்திகளை இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே படியுங்கள்.

இதனைத்தொடர்ந்து, கோலத்தை அவர் அழிக்கும் காட்சியும், மற்ற குடியிருப்புவாசிகளுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் வீடியோவாக வைரலாகிய நிலையில் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Marunadan Malayali செய்தி ஊடகத்தில் சிமி நாயரின் பேட்டியும் இடம்பெற்றுள்ளது. அதில் அவர் தான் ஒரு இந்து என்பதை தெளிவாகக் கூறியுள்ளார். எனவே, பெங்களூருவில் கோலத்தை அழித்த வேற்றுமதப்பெண் என்பதாக இந்த வீடியோ அவதூறாகப் பரப்பப்பட்டு வருகிறது என்பது உறுதியாகிறது.

 Also Read: திருப்பதி ஏழுமலையான் கோவில் படிகளை கழுவி சுத்தம் செய்தாரா பவன் கல்யாண்?

Conclusion

பெங்களூருவில் ஓணத்தன்று போடப்பட்ட அத்தப்பூ கோலத்தை அழித்த பெண் இந்து அல்லாத வேற்று மதத்தைச் சேர்ந்தவர் என்று பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Sources
News Report From, TOI, Dated September 26, 2024
YouTube Video From, Marunadan Malayali, Dated September 24, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular