Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: விழுப்புரம் மாவட்டத்தில் 8 ஊராட்சி தலைவர்கள் அண்மையில் பதவி நீக்கம்
Fact: இந்நிகழ்வு 2009-ஆம் ஆண்டில் நடந்ததாகும்
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்திய விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 8 ஊராட்சி தலைவர்களை பதவி நீக்கம் செய்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
மேலும் நியூஸ்செக்கரின் டிப்லைன் எண்ணான 9999499044 என்கிற எண்ணுக்கு இதே செய்தியை வாசகர் ஒருவர் அனுப்பி, அதன் உண்மைத்தன்மை குறித்து விசாரித்திருந்தார்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
விழுப்புரம் மாவட்டத்தில் 8 ஊராட்சி தலைவர்கள் அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இத்தகவல் உண்மையானதா என தேடினோம்.
இத்தேடலில் இந்நிகழ்வு உண்மையானதுதான். ஆனால் இந்நிகழ்வு தற்போது நடக்கவில்லை, அது கடந்த 2009 ஆண்டு நடந்தது என்று அறிய முடிந்தது. வெப் துனியா எனும் இணைய ஊடகத்தில் பிப்ரவரி 9, 2009 அன்று, ‘விழுப்புரம் மாவட்டத்தில் 8 ஊராட்சி தலைவர்கள் பதவி நீக்கம்’ என்று தலைப்பிட்டு இந்நிகழ்வு குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.
இச்செய்தியில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்திய காரணத்தால் ஆயந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாராம், கீழ்பூதேரி ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி, கருந்தாலக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் தேவகி, தச்சம்பட்டு ஊராட்சிமன்ற தலைவர் தேன்மொழி ரவிச்சந்திரன், பரனூர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், கஞ்சனூர் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி, பாலப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மணிபாலன், ஐவேலி ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி ஆகிய 8 ஊராட்சி தலைவர்கள் மற்றும் கீழ்பூதேரி ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜேந்திரன், பாலப்பட்டு ஊராட்சி மன்ற துணை தலைவர் தயாநிதி உள்பட 10 பேரை மாவட்ட ஆட்சித் தலைவர் பழனிச்சாமி பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இந்த பதவி நீக்கம் குறித்து வெளியிடப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் நமக்கு கிடைத்தது.
Also Read: நியாயம் கேட்ட இளைஞரை தாக்கினாரா பிரிஜ் பூஷன் சரண் சிங்?
விழுப்புரம் மாவட்டத்தில் 8 ஊராட்சி தலைவர்கள் அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக வைரலாகும் தகவல் தவறானது என்பதும், உண்மையில் இந்நிகழ்வு 14 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்தது என்பதும் நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Stationary And Printing Department’s Gazette
Report from Webduniya, Dated February 09, 2009
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
June 17, 2025
Ramkumar Kaliamurthy
December 29, 2021
Ramkumar Kaliamurthy
January 7, 2025