சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkஅயோத்தி ராமரைப் பார்த்து கண்ணீர் விட்ட புகைப்படக் கலைஞர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

அயோத்தி ராமரைப் பார்த்து கண்ணீர் விட்ட புகைப்படக் கலைஞர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: ஆனால் அந்த கேமராமேன் ? தாரை தாரையாக வழிகிறதே… நாம மட்டுந்தான்னு நெனச்சேன்.. ஊரே அழுதிருக்கு.. எல்லோரையும் அழவைத்துவிட்டான் அந்தச் சிறுவன்

Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் புகைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.

அயோத்தி ராமர் சிலையை பார்த்து கண்ணீர் விட்ட புகைப்படக் கலைஞர் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”சங்கராச்சாரியர் ஆன்மீகப் பெரியவர் புரிந்துகொள்ள முடிகிறது..! ஆனால் அந்த கேமராமேன் ? தாரை தாரையாக வழிகிறதே… நாம மட்டுந்தான்னு நெனச்சேன்.. ஊரே அழுதிருக்கு.. எல்லோரையும் அழவைத்துவிட்டான் அந்தச் சிறுவன்” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது.

அயோத்தி
Screenshot from Facebook/vijaybaskar.vijaybaskar.963

Facebook Link

Screenshot from Facebook/srinivasan.parthasarathy.9

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ராமர் கோவில் கும்பாபிஷேக தினத்தில் கும்பகோணத்தில் பக்தர்கள் கூடியதாக பரவும் பழைய வீடியோ!

Fact Check/Verification

அயோத்தி ராமர் சிலையை பார்த்து கண்ணீர் விட்ட புகைப்படக் கலைஞர் என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அப்புகைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது நமக்கு உறுதியாகியது.

கடந்த 2019ஆம் ஆண்டு, ஜனவரி 24 அன்று AFC Asian Cup அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இந்த புகைப்படக்கலைஞரின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.ஈராக்கைச் சேர்ந்த Muhammad Amer Al-Azzawi என்னும் இந்த புகைப்படக்கலைஞர் கத்தார் – ஈராக் இடையே நடைபெற்ற போட்டியில் ஈராக் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அழுததாக செய்திகளில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து இங்கே படியுங்கள்.

எகிப்திய செய்தி ஊடகமான Masrawy-வில் முகமதுவின் பேட்டி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: புர்ஜ் கலீஃபாவில் ஒளிரும் ராமர் என்று எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்த தந்தி டிவி!

Conclusion

அயோத்தி ராமர் சிலையை பார்த்து கண்ணீர் விட்ட புகைப்படக் கலைஞர் என்று பரவும் புகைப்படச் செய்தி தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
X post from, @afcasiancup, Dated January 24, 2019
Report from masrawy


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular