Fact Check
குடிபோதையில் குழந்தைகளைக் கொடூரமாகத் தாக்கும் நபரின் வீடியோ தமிழகத்தைச் சேர்ந்ததா?
Claim: குடிபோதையில் குழந்தைகளைக் கொடூரமாகத் தாக்கும் தமிழக நபர்
Fact: வைரலாகும் வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டு ஆந்திராவில் எடுக்கப்பட்டதாகும்.
குடிபோதையில் குழந்தைகளைக் கொடூரமாகத் தாக்கும் நபர் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“மது போதையா ? வீரன் போல் சூரன் என புது மது வகையை அறிமுக படுத்த டாஸ்மாக் நிறுவனத்தை கேட்டு கொள்கிறேன்” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இந்தியா கூட்டணி 304 இடங்களை பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டதா இந்தியா டுடே?
Fact Check/Verification
குடிபோதையில் குழந்தைகளைக் கொடூரமாகத் தாக்கும் நபர் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அந்த வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நடைபெற்றது என்பதை நம்மால் அறிய முடிந்தது.
கடந்த 2022ஆம் ஆண்டு, அசோக் வெமுலபள்ளி என்னும் ஊடகவியலாளர் ஒருவர் இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்திருப்பது நமக்குக் கிடைத்தது.
இப்பதிவின் கீழ், இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது என்று மேற்கு கோதாவரி காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நாம் தேடியதில், ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், தாடேபள்ளிக்குடம் பகுதியில் கஞ்சி டேவிட் ராஜூ என்கிற ரவி என்னும் நபர் குடிபோதையில் மனைவி வெளிநாட்டில் இருந்த நிலையில் தனது இரண்டு பெண் குழந்தைகளையும் தாக்கிய நிலையில் இந்த வீடியோ வைரலானதால் உடனடியாக பென்டபாடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தைகளை மீட்டனர் என்று கடந்த செப்டம்பர் 15, 2022 அன்று ABP Telugu செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், அவரது மனைவி வெளிநாட்டில் இருந்து திரும்பிய நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டில் மீண்டும் மனைவியுடன் சேர்ந்து வாழ அவரை தாய் வீட்டில் இருந்து அழைத்து வந்த டேவிட் ராஜூ அவரையும் கொன்று விட்டு தானும் பூச்சி மருந்து குடித்து இறந்ததாக Times Of India செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த செய்தி IBC Tamil, NTVTelugu ஆகிய ஊடகங்களிலும் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட வீடியோவே தற்போது தமிழகத்தில் எடுக்கப்பட்டதாகப் பரவி வருகிறது.
Also Read: மோடியின் உருவபொம்மையை எரித்த காங்கிரஸ் கட்சியினர் வேட்டியில் தீப்பிடித்ததா?
Conclusion
குடிபோதையில் குழந்தைகளைக் கொடூரமாகத் தாக்கும் நபரின் வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டு ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் எடுக்கப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Report By ABP Telugu, Dated September 15, 2022
X Post From, @ashuvemulapalli, Dated September 15, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)