Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
தமிழ்நாடு பாஜக அலுவலகத்தின் மீது குண்டு வீசச் சொன்னதே அண்ணாமலைதான் என்று கைதான கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்ததாக நியூஸ் கார்டு ஒன்று வைரலாகிறது.
கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி இரவு, சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பானது. குறிப்பிட்ட சம்பவத்தில் கருக்கா வினோத் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், “குண்டு வீச சொன்னதே அண்ணாமலை தான். பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச சொன்னதே அண்ணாமலை தான். இருவருக்கும் இடையேயான தொலைபேசி அழைப்பு பதிவை போலீசாரிடம் ஒப்படைத்தார் கருக்கா வினோத். தேர்தலுக்காக வீசியதாக வாக்குமூலம்” என்று நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சமீபத்தில் காலமான பாடகி லதா மங்கேஷ்கரின் கடைசி வார்த்தைகளா இவை?
தமிழ்நாடு பாஜக அலுவலகத்தின் மீது குண்டு வீசச் சொன்னதே மாநிலத்தலைவர் அண்ணாமலைதான் என்று கைதான கருக்கா வினோத் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அப்போது, குறிப்பிட்ட வைரல் நியூஸ் கார்டு ஏபிபி நாடு ஊடகத்தின் செய்தியாக பரவிய நிலையில், அவர்கள் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் வைரல் நியூஸ்கார்டு போலியானது என்று உறுதி செய்துள்ளனர்.
இதுகுறித்து, ஏபிபி நாடு செய்தி தளத்தின் ஆசிரியர் மனோஜ் பிரபாகரைத் தொடர்பு கொண்டோம். அவரும் குறிப்பிட்ட நியூஸ் கார்டு போலி என்று விளக்கமளித்தார்.
தொடர்ந்து, குறிப்பிட்ட நியூஸ்கார்டு குறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையின் செயலாளர் பிரபாகரைத் தொடர்பு கொண்டு பேசினோம். குறிப்பிட்ட செய்தியில் சற்றும் உண்மையில்லை என்று அவரும் நமக்கு உறுதி செய்தார்.
தமிழ்நாடு பாஜக அலுவலகத்தின் மீது குண்டு வீசச் சொன்னதே மாநிலத்தலைவர் அண்ணாமலைதான் என்று கைதான கருக்கா வினோத் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
BJP Tamil Nadu
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
February 24, 2025
Ramkumar Kaliamurthy
February 19, 2025
Vijayalakshmi Balasubramaniyan
February 19, 2025