Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: அண்ணாமலை உண்மை பேசும் வரை கடன் கிடையாது என்ற வாசகம் பொருந்திய அறிவிப்பு பலகை உணவகம் ஒன்றில் வைக்கப்பட்டது.
Fact: வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
அண்ணாமலை உண்மை பேசும் வரை கடன் கிடையாது என்ற வாசகம் பொருந்திய அறிவிப்பு பலகை உணவகம் ஒன்றில் வைக்கப்பட்டதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அடையார் ஆனந்த பவன் சங்கிகளுக்கு அனுமதி இல்லை என்றதா?
அண்ணாமலை உண்மை பேசும் வரை கடன் கிடையாது என்ற வாசகம் பொருந்திய அறிவிப்பு பலகை உணவகம் ஒன்றில் வைக்கப்பட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அதன் உண்மைத்தன்மை குறித்து அறிய அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். இதில் அப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை நம்மால் அறிய முடிந்தது.
உண்மையில் வைரலாகும் படத்தில் இருக்கும் அறிவிப்பு பலகையில், “கன்னித்தீவு கதை முடியும் வரை கடன் கிடையாது” என்றே எழுதப்பட்டிருந்தது. கன்னித்தீவு என்பது தினத்தந்தி நாளிதழில் வெளிவரும் தொடர் படக்கதையாகும். இந்த கதையானது 1960-லிருந்து இன்று வரை தொடர்ந்து தினத்தந்தியில் தினமும் பிரசுரிக்கப்பட்டு வருகின்றது.
இந்த படம் உண்மையில் எங்கே, எப்பொழுது எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் ஏதும் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் இப்படம் நான்கு வருடங்களுக்கு முன்பிலிருந்தே சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையானப் படத்தையும் எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
இதற்கு முன்பு இதே புகைப்படத்தை எடிட் செய்து சீமான் உண்மை சொல்லும் வரை கடன் கிடையாது என்று அறிவிப்பு பலகை வைத்ததாக புகைப்படம் ஒன்று வைரலானது. அதை நியூஸ்செக்கர் தரப்பில் ஆய்வு செய்து செய்து வெளியிட்டிருந்தோம். அதை இங்கே காணலாம்.
Also Read: காமாக்யா தேவியின் முகம் 15 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்களுக்கு காட்டப்படுகிறதா?
உணவகம் ஒன்றில் அண்ணாமலை உண்மை பேசும் வரை கடன் கிடையாது என்ற வாசகம் பொருந்திய அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Sharechat post
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
April 14, 2025
Ramkumar Kaliamurthy
April 12, 2025
Vijayalakshmi Balasubramaniyan
April 7, 2025