திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkஅடையார் ஆனந்த பவன் சங்கிகளுக்கு அனுமதி இல்லை என்றதா?

அடையார் ஆனந்த பவன் சங்கிகளுக்கு அனுமதி இல்லை என்றதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: சங்கிகளுக்கு அனுமதி இல்லை என்று அடையார் ஆனந்த பவன் அறிவிப்பு பலகை வைத்தது.

Fact: வைரலாகும் செய்தி தவறானதாகும். அடையார் ஆனந்த பவன் தரப்பு இதை மறுத்துள்ளது.

“மாட்டுச்சாணம் சாப்பிடுபவர்கள் மாற்றுப் பாதையில் செல்லவும். சங்கிகளுக்கு அனுமதி இல்லை” என்று அடையார் ஆனந்த பவன் அறிவிப்பு பலகை வைத்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சங்கிகளுக்கு அனுமதி இல்லை என்று அடையார் ஆனந்த பவன் அறிவிப்பு பலகை வைத்ததாக வைரலாகும் தகவல்

X Link | Archive Link

சங்கிகளுக்கு அனுமதி இல்லை என்று அடையார் ஆனந்த பவன் அறிவிப்பு பலகை வைத்ததாக வைரலாகும் தகவல்

Archive Link

சங்கிகளுக்கு அனுமதி இல்லை என்று அடையார் ஆனந்த பவன் அறிவிப்பு பலகை வைத்ததாக வைரலாகும் தகவல்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கோவிலில் குண்டு வைக்க முயன்ற ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check/Verification

சங்கிகளுக்கு அனுமதி இல்லை என்று அடையார் ஆனந்த பவன் அறிவிப்பு பலகை வைத்ததாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து அதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

முன்னதாக அடையாறு ஆனந்த பவனின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் இணையத்தளத்தில் இவ்வாறு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதா என ஆராய்ந்தோம். அதில் இவ்வாறு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து அடையார் ஆனந்த பவனின் மேலாளர் சித்திக்கை தொடர்புக் கொண்டு இத்தகவல் குறித்து விசாரித்தோம். அவர் இத்தகவல் முற்றிலும் பொய்யானது. இதுபோன்று தவறானத் தகவல்கள் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. இதுபோன்று பொய்யான தகவல்கள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

Also Read: பங்காரு அடிகளாருக்கும் சீமானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மேல்மருவத்தூர் சித்தர் பீடம் மறுத்ததா?

Conclusion

சங்கிகளுக்கு அனுமதி இல்லை என்று அடையார் ஆனந்த பவன் அறிவிப்பு பலகை வைத்ததாக வைரலாகும் தகவல் முற்றிலும் தவறானதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone Conversation with Siddique, General Manager, Adyar Ananda Bhavan
Self Analysis


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular