ஞாயிற்றுக்கிழமை, மே 19, 2024
ஞாயிற்றுக்கிழமை, மே 19, 2024

HomeFact Checkபாம்பு கடித்த இளைஞருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காமல் கங்கையில் மிதக்க வைத்ததால் உயிரிழந்தாரா?

பாம்பு கடித்த இளைஞருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காமல் கங்கையில் மிதக்க வைத்ததால் உயிரிழந்தாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: உத்திரப்பிரதேசத்தில் பாம்பு கடித்த இளைஞருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காமல் கங்கையில் மிதக்க வைத்ததால் உயிரிழந்தார்.

Fact: இத்தகவல் தவறானதாகும். அவர் உயிரிழந்ததாக மருத்துவர் அறிவித்தப்பின், இறந்த அவரின் உடலே கங்கை நீரில் மிதக்க வைக்கப்பட்டுள்ளது.

“மூடநம்பிக்கையால் பறிப்போன இளைஞரின் உயிர்! உபியில் மோகித் குமார்(20) என்பவரை பாம்பு கடித்துள்ளது. ஓடும் கங்கை நீரில் உடலை வைத்தால் விஷம் நீங்கும் என்று கூறப்பட்டதால் அவரது உடலை 2 நாட்களாக அவரது குடும்பத்தினர் கங்கையில் மிதக்க வைத்திருந்தனர். இறுதியில் அவர் உயிரிழந்துவிட்டார்!” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

உத்திரப்பிரதேசத்தில் பாம்பு கடித்த இளைஞருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காமல் கங்கையில் மிதக்க வைத்ததால் உயிரிழந்ததாக பரப்பப்படும் தகவல்

X Link | Archive Link

உத்திரப்பிரதேசத்தில் பாம்பு கடித்த இளைஞருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காமல் கங்கையில் மிதக்க வைத்ததால் உயிரிழந்ததாக பரப்பப்படும் தகவல்

X Link

உத்திரப்பிரதேசத்தில் பாம்பு கடித்த இளைஞருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காமல் கங்கையில் மிதக்க வைத்ததால் உயிரிழந்ததாக பரப்பப்படும் தகவல்

X Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: போதை மனிதனின் அடிப்படை உரிமை என்று பேசினாரா இயக்குநர் வெற்றிமாறன்?

Fact Check/Verification

உத்திரப்பிரதேசத்தில் பாம்பு கடித்த இளைஞருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காமல் கங்கையில் மிதக்க வைத்ததால் உயிரிழந்ததாக பரவும் வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி வைரலாகும் வீடியோ குறித்து தேடினோம்.

இத்தேடலில் தி குவிண்ட் செய்தி ஊடகத்தில் உத்திரப்பிரதேசத பத்திரிக்கையாளராக பணிபுரியும் பியூஷ் ராய் என்பவர் அவரது எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் இவ்வீடியோவை பகிர்ந்து, இதுத்தொடர்பான சம்பவம் குறித்து பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.

20 வயதான மோஹித் பாம்புக் கடியால் உயிரிழந்ததாகவும், அவர் மறுபடியும் உயிர்பெற்று வருவார் எனும் நம்பிக்கையில் அவரது உடலை உறவினர்கள் கயிற்றில் கட்டி கங்கை நதியில் மிதக்கவிட்டதாகவும், மூன்று நாட்களாகியும் அவர் உயிர்பெற்று வராததால் அவரது உடல் தகனம் செய்யப்பட்டதாகவும் பியூஷ் ராய் அப்பதிவில் தெரிவித்திருந்தார்.

உத்திரப்பிரதேசத்தில் பாம்பு கடித்த இளைஞருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காமல் கங்கையில் மிதக்க வைத்ததால் உயிரிழந்ததாக பரப்பப்படும் தகவல்

தொடர்ந்து தேடுகையில் NDTV-யும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்தியில் மோஹித் குமாரை பாம்பு கடித்தப்பின் உறவினர்கள் அவரை மருத்துவரிடம் அழைத்து சென்றதாகவும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும், அதனை தொடர்ந்து குடும்பத்தினர் மூடநம்பிக்கையில் அவரது உடலை கங்கையில் மிதக்கவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உத்திரப்பிரதேசத்தில் பாம்பு கடித்த இளைஞருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காமல் கங்கையில் மிதக்க வைத்ததால் உயிரிழந்ததாக பரப்பப்படும் தகவல்
Screengrab from NDTV

இவற்றின் அடிப்படையில் பார்க்கையில் மோஹித் குமார் உயிரிழந்த பிறகே கங்கையில் கட்டி வைக்கப்பட்டுள்ளார் என்பது தெளிவாகின்றது.

இதனையடுத்து தேடுகையில் மேலும் சில ஊடகங்களிலும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்திகளிலும் மோஹித் குமார் உயிரிழந்த பிறகே கங்கையில் கட்டி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் பாம்புக்கடிப்பட்டவருக்கு மருத்துவ உதவி செய்யாமல் மூட நம்பிக்கையில் அவரை குணப்படுத்த கங்கை நதியில் கட்டி வைத்தததாக பரப்பப்படும் தகவல் தவறானது என்பது தெளிவாகின்றது.

Also Read: மாநிலத் தலைவர் பதவி தந்தால் பாஜகவில் சேர முடிவெடுத்துள்ளாரா செங்கோட்டையன்?

Conclusion

உத்திரப்பிரதேசத்தில் பாம்பு கடித்த இளைஞருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காமல் கங்கையில் மிதக்க வைத்ததால் உயிரிழந்ததாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Tweet Post from Piyush Rai, Principal Correspondent, The Quint, Dated May 02, 2024
Report from NDTV, Dated May 02, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular