வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024
வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024

HomeFact Checkஊடகத்துறையினரைப் பார்த்து மோடி அருவருக்கிறார் என்று கூறினாரா அண்ணாமலை?

ஊடகத்துறையினரைப் பார்த்து மோடி அருவருக்கிறார் என்று கூறினாரா அண்ணாமலை?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

ஊடகத்துறையினரைப் பார்த்து மோடி அருவருக்கிறார் என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

ஊடகத்துறையினரைப்
Source: Facebook

சமீபத்தில் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, மோடி போன்று பெரிய பதவிகளில் அமர அதிக புத்தகங்களைப் படிக்க வேண்டும்; நான் இதுவரை 20 ஆயிரம் புத்தகங்கள் படித்துள்ளேன் என்பதாகக் கூறிய கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகின.

இந்நிலையில், “ஊடக பிச்சைக்காரர்களை பார்த்து மோடி அருவருக்கிறார். ஊடகத்துறையினர் பிச்சைக்காரர்களைப் போல் பிரதமர் மோடியை சுற்றி நின்று தேர்தல் வாக்குறுதியான 15 லட்சத்தை எப்போது தருவீர்கள்? என்று கேட்பதால்தான் அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பையே தவிர்த்து வருகிறார்.” என்று அண்ணாமலை கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

Source: Facebook

Facebook Link

ஊடகத்துறையினரைப்
Source: Facebook

Facebook Link

Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: உபி தேர்தலில் ஓட்டுப் போடாமல் இருக்க வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததா பாஜக?

Fact Check/Verification

ஊடகத்துறையினரைப் பார்த்து மோடி அருவருக்கிறார் என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

ஜூனியர் விகடன் பெயரில் குறிப்பிட்ட நியூஸ் கார்டு பரவிய நிலையில் குறிப்பிட்ட வைரல் கார்டில் எழுத்துப்பிழைகள் இருந்தன. எனவே, வைரலாகும் நியூஸ் கார்டு குறித்து ஜூவி டிஜிட்டல் பிரிவு ஆசிரியர் குழுவைச் சேர்ந்த பிரிட்டோவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலையின் முதன்மை செயலாளரான பிரபாகரும் குறிப்பிட்ட செய்தி போலியானது என்று நமக்கு விளக்கமளித்தார்.

Conclusion

ஊடகத்துறையினரைப் பார்த்து மோடி அருவருக்கிறார் என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Annamalai PA
Junior Vikatan

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular