திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkதிமுகவினர் குறித்து வானதி சீனிவாசன் கூறிய கருத்தில் எந்த தவறுமில்லை என்றாரா அண்ணாமலை?

திமுகவினர் குறித்து வானதி சீனிவாசன் கூறிய கருத்தில் எந்த தவறுமில்லை என்றாரா அண்ணாமலை?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: திமுகவினர் குறித்து வானதி சீனிவாசன் கூறிய கருத்தில் எந்த தவறுமில்லை – அண்ணாமலை

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.

பாஜக சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் கோவையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் திமுகவினர் காலையில் ஒரு வீட்டில் இருப்பார்கள்; மாலையில் வேறொருவர் வீட்டில் இருப்பார்கள் என்று திமுகவினர் குறித்து மிகவும் இழிவாக பேசி இருந்தார்.

இந்த பேச்சானது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், “திமுகவினர் குறித்து வானதி சீனிவாசன் கூறிய கருத்தில் எந்த தவறுமில்லை. கரூர் மாவட்ட திமுகவினர் காலையில் என் வீட்டில் இருப்பார்கள்; மாலையில் யார் வீட்டில் இருப்பார்கள் என்று கூட தெரியாது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

திமுகவினர் குறித்து வானதி சீனிவாசன் கூறிய கருத்தில் எந்த தவறுமில்லை என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்.
Screengrab from Facebook/anand.msa.75

Facebook Link | Archived Link

திமுகவினர் குறித்து வானதி சீனிவாசன் கூறிய கருத்தில் எந்த தவறுமில்லை என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்.
Screengrab from Facebook/Babu.EVR

Archived Link

திமுகவினர் குறித்து வானதி சீனிவாசன் கூறிய கருத்தில் எந்த தவறுமில்லை என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்.
Screengrab from Facebook/Kumar Saran

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு இருக்கை தராமல் அவமதிமதித்தாரா எடப்பாடி பழனிசாமி?

Fact Check/Verification

திமுகவினர் குறித்து வானதி சீனிவாசன் கூறிய கருத்தில் எந்த தவறுமில்லை என்று அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

வைரலாகும் நியூஸ்கார்டானது தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் ‘பொது சிவில் சட்டம் அனைவரையும் இணைப்பதற்காக வரக்கூடிய சட்டம்’ என்று அண்ணாமலை பேசியதாக நியூஸ்கார்ட் ஒன்றை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனைத் தொடர்ந்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் பொறுப்பாளரான வினோத்குமாரை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்து மாற்றப்பட்டது என்பதை அவரும் உறுதி செய்தார்.

Also Read: மாமன்னன் படக்குழுவினர் மீது அவதூறு வழக்கு தொடுப்பேன் என்றாரா ஈ.பி.எஸ்?

Conclusion

மாமன்னன் படக்குழுவினர் மீது அவதூறு வழக்கு தொடுப்பேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Tweet from Thanthi TV, Dated July 05, 2023

Phone Conversation with Vinoth Kumar, Thanthi TV


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular