ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkமுன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு இருக்கை தராமல் அவமதிமதித்தாரா எடப்பாடி பழனிசாமி?

முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு இருக்கை தராமல் அவமதிமதித்தாரா எடப்பாடி பழனிசாமி?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு இருக்கை தராமல் கடைசி வரிசையில் நிற்க வைத்தார் எடப்பாடி பழனிசாமி

Fact: தனபாலுக்கு முதல் வரிசையில் இருக்கை அளிக்கப்பட்டது.

நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு இருக்கை தராமல் கடைசி வரிசையில் நிற்க வைத்து அவமதித்ததாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இத்தகவலை திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி உட்பட பலர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு இருக்கை தராமல் கடைசி வரிசையில் நிற்க வைத்து எடப்பாடி பழனிசாமி அவமதித்ததாக பரவும் தகவல்
Screengrab from Twitter@rajiv_dmk

Twitter Link | Archived Link

முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு இருக்கை தராமல் கடைசி வரிசையில் நிற்க வைத்து எடப்பாடி பழனிசாமி அவமதித்ததாக பரவும் தகவல்
Screengrab from Twitter@JNevilarchpauld

Twitter Link | Archived Link

முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு இருக்கை தராமல் கடைசி வரிசையில் நிற்க வைத்து எடப்பாடி பழனிசாமி அவமதித்ததாக பரவும் தகவல்
Screengrab from Twitter@VIJAYKU74130047

Twitter Link | Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மாமன்னன் படக்குழுவினர் மீது அவதூறு வழக்கு தொடுப்பேன் என்றாரா ஈ.பி.எஸ்?

Fact Check/Verification

முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு இருக்கை தராமல் கடைசி வரிசையில் நிற்க வைத்து எடப்பாடி பழனிசாமி அவமதித்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

நம் தேடலில் நேற்று நடந்த அதிமுக செயலாளர் கூட்டத்தின் முழுப்பகுதி வீடியோவானது ஜே நியூஸ் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை காண முடிந்தது. அவ்வீடியோவின் 13:18 மணியில் தனபால் கூட்டத்திற்குள் வருவதையும், எடப்பாடி பழனிசாமி ‘தம்பி தனபாலுக்கு ஒரு சீட்டு போடு’ என்று கூறுவதையும் காண முடிந்தது.

இதைத் தொடர்ந்து தனபாலுக்கு முன்வரிசையில் இருக்கை தரப்பட்டுள்ளது.

முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு இருக்கை தராமல் கடைசி வரிசையில் நிற்க வைத்து எடப்பாடி பழனிசாமி அவமதித்ததாக பரவும் தகவல்

இதுக்குறித்த புகைப்படமானது அஇஅதிமுகவின் ஐடி விங் டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் காண்கையில் தனபாலுக்கு இருக்கை தரவில்லை என்று பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது உறுதியாகின்றது. தனபால் கூட்டத்திற்கு உள்ளே நுழையும் தருணத்தை ஸ்கிரீன்ஷாட் எடுத்து இந்த பொய்யான தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.

Also Read: எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலியா?

Conclusion

முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு இருக்கை தராமல் கடைசி வரிசையில் நிற்க வைத்து எடப்பாடி பழனிசாமி அவமதித்ததாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Tweet from @AIADMKOfficial, Dated July 05, 2023

Youtube video from News J, Dated July 05, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular