சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkஅண்ணாமலை பாதயாத்திரை வாகனத்தில் இரட்டைப் படுக்கை எதற்கு என்றாரா சீமான்?

அண்ணாமலை பாதயாத்திரை வாகனத்தில் இரட்டைப் படுக்கை எதற்கு என்றாரா சீமான்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: அண்ணாமலை பாதயாத்திரை வாகனத்தில் இரட்டைப் படுக்கை எதற்கு என்று கேள்வி எழுப்பினார் சீமான்

Fact: வைரலாகும் நியூஸ்கார்டு போலியானதாகும்; புதிய தலைமுறை இதை தெளிவு செய்துள்ளது.

“அண்ணாமலை தனியாகதானே நடைபயணம் செல்கிறார். அந்த பேருந்தில் ஒற்றைப் படுக்கை போதுமே, இரட்டைப் படுக்கை எதற்கு“ என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அண்ணாமலை பாதயாத்திரை வாகனத்தில் இரட்டைப் படுக்கை எதற்கு என்று சீமான் கேள்வி எழுப்பியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Twitter@SeelanTamilan1

Twitter Link | Archived Link

அண்ணாமலை பாதயாத்திரை வாகனத்தில் இரட்டைப் படுக்கை எதற்கு என்று சீமான் கேள்வி எழுப்பியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook/chrisd.samuel

Archived Link

அண்ணாமலை பாதயாத்திரை வாகனத்தில் இரட்டைப் படுக்கை எதற்கு என்று சீமான் கேள்வி எழுப்பியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook/mathi.alagan.9843

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அண்ணாமலையின் பாதயாத்திரையில் அதிமுக பங்கேற்காது என்றாரா செல்லூர் ராஜூ?

Fact Check/Verification

அண்ணாமலை பாதயாத்திரை வாகனத்தில் இரட்டைப் படுக்கை எதற்கு என்று சீமான் கேள்வி எழுப்பியதாக நியூஸ்கார்டு ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

வைரலாகும் நியூஸ்கார்டானது புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிட்டுள்ள ஜூலை 27 ஆம் தேதி வைரலாகும் மேற்கண்ட நியூஸ்கார்டை புதிய தலைமுறை வெளியிட்டிருக்கவில்லை.

ஆனால், “அண்ணாமலை மேற்கொள்ளும் நடைபயணம் பழைய மாடல்; நடைபயணத்தால் அவரது உடல் நலம் சீராகும். பத்தாண்டு காலம் நாட்டை ஆண்டு குட்டிச்சுவராக்கிவிட்டு நடைபயணம் செய்வதால் எதுவும் நடக்காது” என்று அண்ணாமலையின் நடை பயணம் குறித்து சீமான் விமர்சித்ததாக நியூஸ்கார்ட் ஒன்றை புதிய தலைமுறை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

இதனையடுத்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் பொறுப்பாளர் இவானியைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர் ‘வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை புதிய தலைமுறைவெளியிடவில்லை’ என்று பதிலளித்தார்.

தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் செய்திப் பிரிவுச் செயலாளர் பாக்கியராசனை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். இத்தகவல் பொய்யானது என்று அவரும் தெளிவு செய்தார்.

இதனையடுத்து வைரலாகும் படுக்கை குறித்து தேடியதில் vehiclemodification.net எனும் தளத்தில் அக்டோபர் 1, 2018-ல் இதே படம் பதிவேற்றப்பட்டிருப்பதை காண முடிந்தது. ஆனால் அண்ணாமலை யாத்திரை செய்யும் வாகனத்தின் உட்பகுதி எவ்வாறு இருக்கும் என்பதை நம்மால் அறிய முடியவில்லை.

Also Read: உத்தரகாண்ட் குறித்து மதவாத பிரச்சாரம் செய்த இந்து சாமியார் விபச்சார அழகிகளுடன் பிடிபட்டாரா?

Conclusion

அண்ணாமலை பாதயாத்திரை வாகனத்தில் இரட்டைப் படுக்கை எதற்கு என்று சீமான் கேள்வி எழுப்பியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report from Puthiya Thalaimurai, Dated July 23, 2023

Phone Conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai
Phone Conversation with Bakkiyarasan, Spokesperson, NTK
Web page from vehiclemodification.net


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular