சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024

HomeFact Checkவீட்டிற்குள் மீன் வந்ததாக பரவும் பழைய வீடியோ!

வீட்டிற்குள் மீன் வந்ததாக பரவும் பழைய வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

தமிழகத்தில் பொழிந்து வரும் தொடர்மழை காரணமாக வீட்டிற்குள் மீன் வந்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பொழிந்து வருகின்றது. இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், “₹2,500 கோடியில் வெள்ள நீரில் இல்லங்களில் கட்லாமீன் வளர்க்கும் திட்டம் துவங்கபட்டது. கடல் அலை போல வருடி செல்லும் அழகு. திமுக கழக அரசின் சாதனை” என்று கூறி தமிழகத்தில் மழை காரணமாக வீட்டிற்குள் மீன்  வந்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தமிழகத்தில் பொழிந்து வரும் தொடர்மழை காரணமாக வீட்டிற்குள் மீன் வந்ததாக பரவும் வீடியோ  - 1

Twitter Link | Archive Link

தமிழகத்தில் பொழிந்து வரும் தொடர்மழை காரணமாக வீட்டிற்குள் மீன் வந்ததாக பரவும் வீடியோ  - 2

Facebook Link

தமிழகத்தில் பொழிந்து வரும் தொடர்மழை காரணமாக வீட்டிற்குள் மீன் வந்ததாக பரவும் வீடியோ  - 3

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

தமிழகத்தில் மழை காரணமாக வீட்டிற்குள் மீன் வந்ததாக வீடியோ ஒன்று வைரலானதைத் தொடர்ந்து,  அந்த வீடியோவை கீ பிரேம்களாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.

இதில் இந்த வீடியோவானது தமிழகத்தில் எடுக்கப்பட்டதல்ல, இது கடந்த ஆண்டு மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் எடுக்கப்பட்டது என்பதை நம்மால் அறிய முடிந்தது.

தமிழகத்தில் பொழிந்து வரும் தொடர்மழை காரணமாக வீட்டிற்குள் மீன் வந்ததாக பரவும் வீடியோ  - 3
Source: TheRakyatpost.Com

சித் ரசாலி எனும் மலேசியர் தனது டிவிட்டர் பக்கத்தில் இவ்வீடியோவை கடந்த ஆண்டு பகிர்ந்துள்ளார்.

Archive Link

சமீப காலங்களில் தமிழகத்தில் பெய்து வரும் மழையை அடிப்படையாக வைத்து பல பொய் செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.  அவற்றை நம் நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்து, அவைகள் பொய்யானவை என ஆதாரங்களுடன் நிரூபித்து வருகின்றோம்.

அச்செய்திகளை படிக்க:

  1. மழைநீரில் முதலை வந்ததாக வதந்தி
  2. ஆற்றில் அடித்துச் செல்லும் மாடுகள்; வைரலாகும் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதா?

Conclusion

தமிழகத்தில் மழை காரணமாக வீட்டிற்குள் மீன் வந்ததாக  சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோ முற்றிலும் பொய்யானது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered

Our Sources

The Rakyat Post

Twitter


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular