சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkஒன்றிய அரசை எதிர்த்து மக்கள் போராட வேண்டும் என்றாரா இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்?

ஒன்றிய அரசை எதிர்த்து மக்கள் போராட வேண்டும் என்றாரா இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: ஒன்றிய அரசை எதிர்த்து மக்கள் போராட வேண்டும் என்றார் இந்திய தலைமை நீதிபதி DY சந்திரசூட்.

Fact: இத்தகவல் தவறானது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

“இந்திய அரசியலமைப்பை, இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற நாங்கள் எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்கிறோம். ஆனால் இதற்கு உங்களின் ஒத்துழைப்பும் மிக அவசியம். மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தெருவில் இறங்கி தங்கள் உரிமைகளை அரசிடம் கேட்க வேண்டும்.

இந்த சர்வாதிகார அரசாங்கம் மக்களை பயமுறுத்துவார்கள், மிரட்டுவார்கள். ஆனால் நீங்கள் பயப்பட வேண்டாம். தைரியமாக இருங்கள். அரசாங்கத்திடம் கணக்கு கேளுங்கள். நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று இந்திய தலைமை நீதிபதி DY சந்திரசூட் கூறியதாக அவரது புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று பரவி வருகின்றது.

ஒன்றிய அரசை எதிர்த்து மக்கள் போராட வேண்டும் என்று இந்திய தலைமை நீதிபதி DY சந்திரசூட் கூறியதாக வைரலாகும் தகவல்

X Link | Archive Link

ஒன்றிய அரசை எதிர்த்து மக்கள் போராட வேண்டும் என்று இந்திய தலைமை நீதிபதி DY சந்திரசூட் கூறியதாக வைரலாகும் தகவல்

Archive Link

ஒன்றிய அரசை எதிர்த்து மக்கள் போராட வேண்டும் என்று இந்திய தலைமை நீதிபதி DY சந்திரசூட் கூறியதாக வைரலாகும் தகவல்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: நாதக 19 சதவீதம் வாக்குகள் பெறும் என்று நியூஸ் 18 தமிழ்நாடு கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?

Fact Check/Verification

ஒன்றிய அரசை எதிர்த்து மக்கள் போராட வேண்டும் என்று இந்திய தலைமை நீதிபதி DY சந்திரசூட் கூறியதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவர் இவ்வாறு எந்த தருணத்திலாவது பேசியுள்ளாரா என்பது குறித்து தேடினோம்.

அத்தேடலில் சந்திரசூட் அண்மையிலோ, அல்லது கடந்து காலங்களிலோ மேற்கண்ட கருத்தை பேசியதாக எந்த ஒரு ஊடகச் செய்தியோ, அல்லது சமூக ஊடகப் பதிவோ நமக்கு கிடைக்கவில்லை.

இதனை தொடர்ந்து தேடுகையில் வைரலாகும் இச்செய்தி பொய்யானது என்று கடந்த வருடம் ஆகஸ்டில் உச்சநீதிமன்றம் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவித்து பத்திரிக்கைச் செய்தி ஒன்று வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

அப்பத்திரிக்கைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,

ஒரு கோப்பு புகைப்படத்தைப் பயன்படுத்தி, இந்திய தலைமை நீதிபதி கூறியதாக சமூக ஊடகப் பதிவு (அரசுக்கு எதிராகப் பொதுமக்களை போராடத் தூண்டுவது போன்ற பதிவு) ஒன்று பரப்பப்படுவது இந்திய உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.

அந்த பதிவானது போலியானதாகும். இப்பதிவானது குழப்பத்தை ஏற்படுத்தும் தவறான நோக்கத்துடன் பரப்பப்பட்டு வருகின்றது. இந்திய தலைமை நீதிபதி இதுபோன்று எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதுபோல இக்கருத்தை அவர் ஆதரிக்கவும் இல்லை.

இக்கருத்தை பரப்பியவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

ஒன்றிய அரசை எதிர்த்து மக்கள் போராட வேண்டும் என்று இந்திய தலைமை நீதிபதி DY சந்திரசூட் கூறியதாக வைரலாகும் தகவல்
press release from Supreme Court of India

இதனையடுத்து தேடியதில் ANI-யின் எக்ஸ் பக்கத்திலும் இந்த பத்திரிக்கைச் செய்தியானது ஆகஸ்ட் 14, 2023 அன்று வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் மேலும் சில ஊடகங்களிலும் உச்சநீதிமன்றத்தின் இந்த மறுப்பு அறிக்கை குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

வைரலாகும் இத்தகவலானது கடந்த வருடமே ஆங்கிலத்தில் சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து, நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் இதுகுறித்து முழுமையாக ஆராய்ந்து, இத்தகவல் பொய்யானது என்று ஆகஸ்ட் 14, 2023 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அச்செய்தியை இங்கே காணலாம்.

 Also Read: குஜராத்தில் ராகுல் காந்தியின் தெருமுனை பிரச்சாரம் என்று பரவும் கேரளா வீடியோ!

Conclusion

ஒன்றிய அரசை எதிர்த்து மக்கள் போராட வேண்டும் என்று இந்திய தலைமை நீதிபதி DY சந்திரசூட் கூறியதாக வைரலாகும் தகவல் முற்றிலும் தவறானதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Supreme Court of India press release, August 14, 2023
Tweet from ANI, Dated August 14, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular