Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
அஜித்குமார் மாரடைப்பால் மரணமடைந்தார் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
வைரலாகும் தகவல் தவறானது என்று திமுக தரப்பும், நியூஸ் 7 தமிழ் தரப்பும் உறுதி செய்துள்ளது.
சிவகங்கை திருப்புவனம் பகுதியில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அஜித்குமார் எனும் இளைஞர் மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ஆளும் திமுக அரசை விமர்சித்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நாதக தலைவர் சீமான், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், “விசாரணை கைதிகள் விசாரணையின் போது; பயத்தினால் மாரடைப்பால் மரணமடைவது இயற்கையானது! இதை வைத்து மலிவான அரசியல் செய்வது வெட்க கேடானது” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



Also Read: திருப்பத்தூர் பேருந்து நிலையம் எதிரில் நிகழ்ந்த விபத்து என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த அஜித்குமார் மாரடைப்பால் மரணமடைந்தார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து இம்மரணம் குறித்து முதலமைச்சர் ஏதேனும் பேசியுள்ளாரா என தேடினோம்.
அத்தேடலில் இச்சம்பவம் குறித்து முதலமைச்சர் தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை என அறிய முடிந்தது.
இதனையடுத்து திமுக தலைமைக் கழக செய்தி தொடர்புக் குழுவின் செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர், இத்தகவல் பொய்யானது, முதலமைச்சர் ஸ்டாலின் இவ்வாறு பேசவில்லை” என்று பதிலளித்தார்.
இதனை தொடர்ந்து வைரலாகும் நியூஸ்கார்டானது நியூஸ் 7 தமிழ் ஊடகத்தின் நியூஸ்கார்டு டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டிருக்கவில்லை. மாறாக “இந்த செய்தியை நியூஸ் 7 தமிழ் வெளியிடவில்லை!“ என்று மறுப்பு தெரிவித்து பதிவிட்டிருந்தது.

Also Read: திருப்பதி கோவிலில் பணம் திருடப்படுவதாக பரவும் வீடியோ உண்மையானதா?
போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த அஜித்குமார் மாரடைப்பால் மரணமடைந்தார் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும். திமுக தரப்பும், நியூஸ் 7 தரப்பும் இதை உறுதி செய்துள்ளது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Phone Conversation with Professor Constantine Ravindran, Secretary, Spokesperson Committee, DMK.
X post from News 7 Tamilnadu, dated June 26, 2025.
Vijayalakshmi Balasubramaniyan
September 26, 2025
Ramkumar Kaliamurthy
September 17, 2025
Ramkumar Kaliamurthy
September 16, 2025