Claim: விநாயகர் சதுர்த்தியை வீட்டிலிருந்தே கொண்டாடுங்கள் – அமைச்சர் சேகர் பாபு
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் கொரோனா காலகட்டத்தை சேர்ந்ததாகும்.
விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டிலிருந்தே வழிபட்டால் அவர்களது கோரிக்கையை விநாயகர் கட்டாயம் ஏற்றுக்கொள்வார் என்று நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
”கடவுளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். வீட்டிலிருந்தே விநாயகரை வழிபட்டால் அவர்களின் கோரிக்கையை விநாயகர் கட்டாயம் ஏற்றுக்கொள்வார். அரசியல் நடத்துவதற்குப் பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. கடவுளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பாஜகவின் பொய்யால் குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ.7.5 கோடியை இழந்த நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check/Verification
விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டிலிருந்தே வழிபடச் சொல்லிய அமைச்சர் சேகர்பாபு என்று பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்டினை ரிவர்ஸ் சர்ச் செய்து பார்த்தபோது குறிப்பிட்ட நியூஸ்கார்ட் தினமலரில் கடந்த செப்டம்பர் 06, 2021ஆம் ஆண்டு அன்று வெளியாகியது என்பது நமக்கு தெரிய வந்தது.
2021ஆம் ஆண்டு கொரோனா பரவல் அதிகமாக இருந்த காலகட்டத்தில் அதிக பரவலை தடுக்கும் வகையில் விழாக்காலங்களில் மக்கள் எச்சரிக்கையுடன் தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றவேண்டும் என்று தெரிவித்திருந்தது ஒன்றிய அரசு. இதைத்தொடர்ந்தே, அந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு கூட்டாக சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு செல்ல தமிழகத்தில் அனுமதி இல்லை என்றும், தனி நபர்கள் சிலைகளை கரைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து செப்டம்பர் 04, 2021 அன்று பாஜக எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி எழுப்பிய கேள்விக்கு ”கொரோனா மூன்றாவது அலை உருவாகும் சூழல் காரணமாக மக்கள் கூடும் வகையில் விழாக்களை நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளார். அதனடிப்படையில்தான் தமிழ்நாடு அரசு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது” என்று பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆடு, கோழி பலியிட தடை விதிப்போம் என்றாரா அண்ணாமலை?
Conclusion
விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டிலிருந்தே வழிபடச் சொல்லிய அமைச்சர் சேகர்பாபு என்று பரவும் நியூஸ்கார்ட் கொரோனா காலகட்டத்தில் வெளியாகிய செய்தி என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
Facebook Post From, Dinamalar, Dated September 06, 2021
News Report From, News 7 Tamil, Dated September 04, 2021
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)