திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkபாஜக ஆட்சிக்கு வந்தால் ஆடு, கோழி பலியிட தடை விதிப்போம் என்றாரா அண்ணாமலை?

பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆடு, கோழி பலியிட தடை விதிப்போம் என்றாரா அண்ணாமலை?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: பாஜக ஆட்சிக்கு வந்தால் கோயில்களில் ஆடு, கோழி பலியிட தடை விதிப்போம் – அண்ணாமலை

Fact: இத்தகவல் பொய்யானது என்று பாஜக தரப்பு மறுத்துள்ளது.

“ஆடு, கோழி பலியிடும் முறை சனாதன வழிபாட்டிற்கு எதிரானது. பாஜக ஆட்சிக்கு வந்தால் பலியிடும் முறையை தடை செய்வோம்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்டுகள் சில சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

பாஜக ஆட்சிக்கு வந்தால் கோயில்களில் ஆடு, கோழி பலியிட தடை விதிப்போம் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல்

X Link | Archived Link

பாஜக ஆட்சிக்கு வந்தால் கோயில்களில் ஆடு, கோழி பலியிட தடை விதிப்போம் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல்

X Link | Archived Link

பாஜக ஆட்சிக்கு வந்தால் கோயில்களில் ஆடு, கோழி பலியிட தடை விதிப்போம் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல்

Facebook Link

பாஜக ஆட்சிக்கு வந்தால் கோயில்களில் ஆடு, கோழி பலியிட தடை விதிப்போம் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல்

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பாஜகவின் பொய்யால் குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ.7.5 கோடியை இழந்த நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check/Verification

பாஜக ஆட்சிக்கு வந்தால் கோயில்களில் ஆடு, கோழி பலியிட தடை விதிப்போம் என்று அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

முன்னதாக தமிழக பாஜகவின் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர் வைரலாகும் இத்தகவல் பொய்யானது என்று பதிலளித்தார்

இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது தந்தி தொலைக்காட்சி மற்றும் புதிய தலைமுறையின் நியூஸ்கார்டு டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனங்கள் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அவற்றின் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை இந்நிறுவனங்கள் வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் துறையை சார்ந்த வினோத்குமாரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர், வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிடவில்லை என்று பதிலளித்தார்.

தொடர்ந்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானியை தொடர்புக் கொண்டு பேசுகையில், அவரும் இந்த நியூஸ்கார்டு போலியானது என்று உறுதி செய்தார்.

Also Read: லியோ திரைப்படத்திலிருந்து லோகேஷ் கனகராஜ் விலகியதாக பரவும் போலி நியூஸ்கார்டு!

Conclusion

பாஜக ஆட்சிக்கு வந்தால் கோயில்களில் ஆடு, கோழி பலியிட தடை விதிப்போம் என்று அண்ணாமலை கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone Conversation with S.G.Suryah, State Secretary, BJP
Phone Conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai
Phone Conversation with Vinoth Kumar, Thanthi TV


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular