வியாழக்கிழமை, மே 2, 2024
வியாழக்கிழமை, மே 2, 2024

HomeFact Checkபாஜகவின் பொய்யால் குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ.7.5 கோடியை இழந்த நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?

பாஜகவின் பொய்யால் குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ.7.5 கோடியை இழந்த நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: பாஜகவின் பொய் பிரச்சாரத்தால் குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ 7.5 கோடியை இழந்த நபர்

Fact: வைரலாகும் வீடியோ தகவல் தவறானதாகும்.

பாஜகவின் பொய் பிரச்சாரத்தால் உஜ்ஜைனி மாகாளி லோக் கட்டப்பட்டது எந்த அரசு காலகட்டத்தில் என்ற கேள்விக்கு குரோர்பதி நிகழ்ச்சியில் தவறாக பதிலளித்து 7.5 கோடி ரூபாயை இழந்த நபர் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

”பாஜகவின் போலிப் பிரச்சாரத்தால் இந்த நபர் ₹ 7.5 கோடி இழந்துள்ளார். மகாகால் காரிடர் காங்கிரஸ் தலைவர் கமல்நாத் ஜி முதல்வராக இருந்தபோது கட்டினார், ஆனால் இது மோடி மற்றும் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரால் கட்டப்பட்டது என்ற தொடர்ச்சியான பொய்கள் மற்றும் போலி பிரச்சாரத்தால், அவர் அந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து தோல்வியடைந்தார்.
பாஜகவின் பொய்களைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள், பாஜக, RSS ன் வாட்சப் யூனிவர்சிட்டி ஆபத்தானது.”
என்று இந்த வீடியோ வைரலாகிறது.

Screenshot from X @niayayakkural

Archived Link

Screenshot from Facebook/shajahan.abthulkareem

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விநாயகர் சதுர்த்தி என்று பரவும் கொரோனா காலகட்ட பழைய செய்தி!

Fact Check/Verification

பாஜகவின் பொய் பிரச்சாரத்தால் குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ 7.5 கோடியை இழந்த நபர் என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவில் அமிதாப் பச்சனின் செயல்களும், குரலும் ஒன்றுடன் ஒன்று பொருந்தவில்லை. எனவே, இதுதொடர்பான கீ-வேர்டுகள் மூலமாக தேடுதலில் ஈடுபட்டோம். அதன்முடிவில், KBC நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் இருந்து குறிப்பிட்ட நபர் பங்குபெற்றிருந்த எபிசோடின் முழு வீடியோ நமக்குக் கிடைத்தது.

சாஸ்வத் கோயல் என்கிற அந்த நபர் தனது 17வது கேள்விக்கான பதிலை சரியாக தேர்ந்தெடுக்காமல் 7.5 கோடி ரூபாய் பரிசை இழந்துள்ளார் என்பதும், எனினும் அவர் 75 லட்ச ரூபாய் வெற்றியாளர் என்பதும் இதன் மூலமாக உறுதியானது.

குறிப்பிட்ட அந்நிகழ்ச்சியில், அமிதாப் பச்சன் கேட்ட “Which British Army unit was given the motto ‘Primus in Indis’ because it was the first to serve in India?” என்கிற கேள்விக்கு தவறான விடையைக் கூறியே சாஸ்வத் 7.5 கோடிக்கான வாய்ப்பை இழந்தார் என்பதையும் நம்மால் அறிய முடிந்தது.  

கடந்த 2022ல் இதுகுறித்த விரிவான கட்டுரையும் Indian express ஊடகப்பக்கத்தில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த அக்டோபர் 12, 2022 அன்று தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான இந்த குறிப்பிட்ட எபிசோடில் இடம்பெற்றுள்ள கேள்விகளை இங்கே காணுங்கள்.   இதன்மூலம், குறிப்பிட்ட KCB நிகழ்ச்சியின் எபிசோடில் உஜ்ஜைனி மாகாளி லோக் பற்றி எந்த கேள்வியும் எழுப்பப்படவில்லை என்பது உறுதியாகிறது.

Also Read: ஹிஜாப் அணிந்து தேசியக்கொடி ஏற்றிய கர்நாடகா கலெக்டர் எனப்பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Conclusion

பாஜகவின் பொய் பிரச்சாரத்தால் குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ 7.5 கோடியை இழந்த நபர் என்று பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Media

Our Sources
YouTube Post From, Sony Pictures, Dated February 15, 2023
Article From, Indian Express, Dated October 12, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular