ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact CheckNewsஎடப்பாடி பழனிச்சாமியின் படத்தை அழித்தனரா சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள்?

எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை அழித்தனரா சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் பெயிண்ட் அடித்து அழித்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் பெயிண்ட் அடித்து அழித்ததாக பரவும் புகைப்படம்

அதிமுகவில் ஓபிஎஸ் –ஈபிஎஸ் என்று இரண்டு அணிகள் பிரிந்து கோஷ்டி தகராறு நடந்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்தவந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர் பேனரில் இருந்த எடப்பாடி பழனிசாமியின் பெயர் மற்றும் புகைப்படத்தை அழித்ததாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் பெயிண்ட் அடித்து அழித்ததாக பரவும் புகைப்படம் - 01
Screenshot from Twitter @usilaigeetha
எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் பெயிண்ட் அடித்து அழித்ததாக பரவும் புகைப்படம் - 02
Screenshot from Facebook / mmanoharan.munusamy
எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் பெயிண்ட் அடித்து அழித்ததாக பரவும் புகைப்படம் - 03
Screenshot from Facebook / anu.thangaswami.7

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கோவிட் குறித்த செய்திகளைப் பகிரும் வாட்ஸ் அப் குழுக்கள் மீது நடவடிக்கை என்கிற செய்தி உண்மையா?  

Fact Check/Verification

எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் பெயிண்ட் அடித்து அழித்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

அதிமுக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து கடந்த சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து இக்கட்சி தொடர்ந்து கூட்டணியில் இருந்து வருகின்றது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் வரவிருக்கும் தேர்தலில் பாஜக திமுகவுடன் கூட்டணி ஏற்படும் என்று சி.வி.சண்முகம் பேசினார். இதற்கு பதிலடி தரும் வகையில் அண்ணாமலையும் பேசி இருந்தார். இதனைத் தொடர்ந்து எம்ஜிஆர் நினைவுநாளில் அவரின் நினைவிடத்துக்கு தனியாக வந்து அஞ்சலி செலுத்தினார் சி.வி.சண்முகம்.

இதனையடுத்து எடப்பாடி அணியில் விரிசல் ஏற்பட்டதாக ஊடகங்களில் செய்தி வந்த நிலையிலேயே எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் பெயிண்ட் அடித்து அழித்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

வைரலாகும் இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி நம் தேடலை தொடங்கினோம். இத்தேடலானது ஜூன் 24, 2022 அன்று ஏபிபி நாடில் வெளிவந்த செய்தி ஒன்றுக்கு நம்மை அழைத்து சென்றது.  

அதிமுக அலுவலகம், சுவர்களில் எழுதப்பட்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் அழிப்பு என்று தலைப்பிட்டு வெளியிடப்பட்டிருந்த அந்த செய்தியில், வைரலாகும் படம் இடம்பெற்றிருந்ததை காண முடிந்தது. ஆனால் அப்படத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் படமும், பெயரும் இடம்பெற்றிருந்தது. ஓ.பன்னீர்செல்வத்தின் படம் மற்றும் பெயர் மட்டுமே அழிக்கப்பட்டிருந்தது.

எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் பெயிண்ட் அடித்து அழித்ததாக பரவும் புகைப்படம் - 04
Screengrab from ABP Naadu

இதனடிப்படையில் காண்கையில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும், எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் பெயிண்ட் அடித்து அழித்ததாக பரவும் புகைப்படம் - 05

Also Read: ரேஷன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்க உத்தரவிட்டாரா முதல்வர் ஸ்டாலின்?

Conclusion

எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் பெயிண்ட் அடித்து அழித்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் படம் எடிட் செய்யப்பட்ட போலியான படம் என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Sources

An article, from ABP Naadu, Dated 24/06/2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular