Fact Check
டெல்லியில் ரேகா குப்தா ஆட்சியில் நுரை பொங்கும் யமுனையில் குளித்த பெண்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
Claim
டெல்லியில் ரேகா குப்தா ஆட்சியில் நுரை பொங்கும் யமுனையில் குளித்த பெண்கள்
Fact
வைரலாகும் வீடியோ கடந்த 2024 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி ஆட்சியில் எடுக்கப்பட்டதாகும்.
டெல்லியில் ரேகா குப்தா ஆட்சியில் நுரை பொங்கும் யமுனையில் குளித்த பெண்கள் என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“கெஜ்ரிவாலை விட டெல்லி முதல்வர் ரேகா குப்தா பரவாயில்லை, யமுனா ஜியை சுத்தம் செய்ய இலவச ஷாம்பு கலந்து விட்டுள்ளார்” என்று இந்த வீடியோ பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை விஜய் சந்தித்ததாக பரவும் பழைய படங்கள்!
Fact Check/Verification
டெல்லியில் ரேகா குப்தா ஆட்சியில் நுரை பொங்கும் யமுனையில் குளித்த பெண்கள் என்பதாக பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த நவம்பர் 2024ஆம் ஆண்டே இந்த வீடியோ பல்வேறு ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது. “These women washing their hair with thick toxic foam in Yamuna river, Delhi” என்று இந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து, தமிழிலும் நியூஸ் 18 தமிழ் உள்ளிட்ட ஊடகங்களில் கடந்த 2024ஆம் ஆண்டு, “சத் பூஜைக்காக யமுனை நதியின் விஷ நுரையில் குளிக்கும் பெண்கள்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!” என்பதாக இது குறித்த செய்தி புகைப்படத்துடன் வெளியாகியிருந்தது.

ஆனால், 2025ஆம் ஆண்டு, பிப்ரவரி 20ஆம் தேதியன்றே ரேகா குப்தா டெல்லி முதல்வராக பொறுப்பேற்றார்.

அவருடைய ஆட்சியிலும் யமுனை நதியிலிருந்து தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு சத் பூஜைக்காக சமீபத்தில் குளம் ஒன்று உருவாக்கப்பட்ட நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்திய போதிலும், யமுனை ஆற்றின் சுத்தம் குறித்த போதுமான தரவுகள் இல்லாவிட்டாலும் இந்த குறிப்பிட்ட வீடியோ கடந்த 2024ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருக்கும் போது எடுக்கப்பட்டது என்பது நமக்கு உறுதியாகிறது.
Also Read: கரூர் வழக்கில் A4 குற்றவாளியாக ராஜ்மோகன் சேர்ப்பு என்று பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?
Conclusion
டெல்லியில் ரேகா குப்தா ஆட்சியில் நுரை பொங்கும் யமுனையில் குளித்த பெண்கள் என்று பரவும் வீடியோ கடந்த 2024ஆம் ஆண்டு ஆம் ஆத்மி ஆட்சியில் எடுக்கப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video by Asianetnews, dated November 08, 2024
Report by News 18 Tamil, dated December 10, 2024
Report by DDNews, dated Februry 20, 2025