Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: முதல்வர் சென்னை திரும்பிய பிறகு கொடைகானல் செல்ல இ-பாஸ் அறிமுகம்
Fact: வைரலாகும் செய்திகளுக்கு எந்த தொடர்பும் இல்லை.
முதல்வரின் கொடைக்கானல் பயணத்துடன் தொடர்பு படுத்தப்பட்டு பரவி வருகிறது ஊட்டி, கொடைக்கானல் இ-பாஸ் நடைமுறை அறிவிப்பு.
“முதல்வர் சென்னை திரும்பிய பிறகு கொடைகானல் செல்ல இ-பாஸ் அறிமுகம்.” என்று இந்த செய்தி பரவி வருகிறது. பாஜக செல்வகுமார் உள்ளிட்டோர் இதனைப் பகிர்ந்து வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தேர்தல் முடிந்ததும் மதுரவாயல் கோயில் இடிக்கப்பட்டதாகப் பரவும் செய்தி உண்மையா?
முதல்வரின் கொடைக்கானல் பயணத்துடன் தொடர்பு படுத்தப்பட்டு பரவி வருகிற ஊட்டி, கொடைக்கானல் இ-பாஸ் நடைமுறை அறிவிப்பு குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் இ-பாஸ் செய்தி குறித்து ஆராய்ந்தபோது சீசன் நேரங்களில் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் வருவதைத் தொடர்ந்து அதைக்கட்டுப்படுத்தும் வகையிலும், அந்த இடங்களின் சுற்றுச்சூழல் கெடாத வகையில் எத்தனை வாகனங்களை தோராயமாக சீசன் சமயங்களில் அனுமதிக்கலாம் என்று பிரபல கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்யவுள்ளதாக அரசு வழக்கறிஞர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது நமக்குத் தெளிவாகியது.
அந்த அறிக்கை வரும்வரையில் கொரோனா காலகட்டம் போன்றே ஊட்டி, கொடைக்கானலுக்கு வருகின்ற பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை செயல்படுத்தப்படும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் உள்ளூர் மக்களுக்கு விலக்கு அளிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றமே மாவட்ட ஆட்சியர்களுக்கு நேரடியாக உத்தரவிட்டுள்ள நிலையில் முதலமைச்சரின் கொடைக்கானல் பயணத்துடன் இச்செய்தி தொடர்பு படுத்து பரப்பப்படுகிறது என்பது நமக்குத் தெளிவாகியது.
Also Read: வேலை இல்லாமல் சமூக வலைத்தளங்களில் பொழுதை கழிக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை என்றாரா ராகுல் காந்தி?
முதல்வரின் கொடைக்கானல் பயணத்துடன் தொடர்புபடுத்தி பரவும் ஊட்டி, கொடைக்கானல் இ-பாஸ் அறிவிப்பு தவறானதாகும். இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
YouTube Video From, News 18 Tamil Nadu, Dated April 30, 2024
Statement of Court Order
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
December 1, 2025
Ramkumar Kaliamurthy
November 28, 2025
Ramkumar Kaliamurthy
November 27, 2025