திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkஅதிமுக ஐ.டி. பிரிவினர் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை விமர்சிக்கக்கூடாது என்றாரா ஈ.பி.எஸ்?

அதிமுக ஐ.டி. பிரிவினர் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை விமர்சிக்கக்கூடாது என்றாரா ஈ.பி.எஸ்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: அதிமுக ஐ.டி. பிரிவினர் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை விமர்சிக்கக்கூடாது என்றார் ஈ.பி.எஸ்

Fact: வைரலாகும் நியூஸ்கார்டு எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும். இத்தகவல் தவறானது என்று அதிமுக தரப்பும், புதிய தலைமுறை தரப்பும் தெளிவு செய்துள்ளது.

“சமூக வலைதளங்களில் அதிமுக ஐ.டி.பிரிவினர் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை விமர்சிக்கக்கூடாது; மீறி விமர்சிக்கும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அதிமுக ஐ.டி. பிரிவினர் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை விமர்சிக்கக்கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

Twitter Link | Archived Link

அதிமுக ஐ.டி. பிரிவினர் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை விமர்சிக்கக்கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு முன்பே பற்றி எரியும் உபி ரயில் நிலையம் எனப்பரவும் வீடியோ உண்மையா?

Fact Check/Verification

அதிமுக ஐ.டி. பிரிவினர் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை விமர்சிக்கக்கூடாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

முன்னதாக அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கோவை சத்யனை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர் இத்தகவல் முற்றிலும் பொய்யானது“ என்று பதிலளித்தார்.

இதையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் “சமூக வலைதளங்களில் அதிமுக ஐ.டி. பிரிவினர் அநாகரீகமாக யாரையும் விமர்சிக்கக்கூடாது; அதிமுக ஐ.டி.விங் எனது நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும். அநாகரீகமாக செயல்படும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக புதிய தலைமுறை நியூஸ்கார்ட் ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனைத் தொடர்ந்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்து மாற்றப்பட்டது என்பதை அவரும் உறுதி செய்தார்.

Also Read: அயோத்தி ராமர் கோயிலுக்கு திருச்சி BHEL நிறுவனம் மணிகளை தயாரித்து அனுப்பியுள்ளதா?

Conclusion

அதிமுக ஐ.டி. பிரிவினர் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை விமர்சிக்கக்கூடாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Report from Puthiya Thalaimurai, Dated January 03, 2024
Phone Conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular