சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkஉ.பி.யின் நிலை என்று பரப்பப்படும் பஞ்சாப் வன்முறை வீடியோ!

உ.பி.யின் நிலை என்று பரப்பப்படும் பஞ்சாப் வன்முறை வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: உ.பி.யின் நிலை என்று பரப்பப்படும் வன்முறை வீடியோ.

Fact: வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு பஞ்சாபில் கடந்த ஆண்டு நடந்ததாகும்.

“தென் இந்தியாவில் பிஜேபி ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்புபவர்கள் கண்ணை விரித்து பாருங்கள், உ.பி.யில் இதுதான் நிலைமை. மதத்தை வைத்து ஆட்சி அமைத்தால் பிறகு மனிதன் மிருகம் ஆகிவிடுவான்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

உ.பி.யின் நிலை என்று பரப்பப்படும் வன்முறை சம்பவம்

X Link | Archive Link

உ.பி.யின் நிலை என்று பரப்பப்படும் வன்முறை சம்பவம்

Archive Link

உ.பி.யின் நிலை என்று பரப்பப்படும் வன்முறை சம்பவம்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: குஜராத்தில் ராகுல் காந்தியின் தெருமுனை பிரச்சாரம் என்று பரவும் கேரளா வீடியோ!

Fact Check/Verification

உ.பி.யின் நிலை என்று பரப்பப்படும் வன்முறை வீடியோவின் உண்மை நிலை குறித்து அறிய அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாகப் பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அவ்வீடியோ குறித்து தேடினோம்.

இத்தேடலில் பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் இந்த வன்முறை சம்பவம் நடந்ததாக ABP பஞ்சாபி இணையத்தளப் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. இச்செய்தியானது பிப்ரவரி 20, 2023 அன்று வெளியிடப்பட்டிருந்தது.

உ.பி.யின் நிலை என்று பரப்பப்படும் வன்முறை சம்பவம்

இச்செய்தியில் தாக்குதலுக்கு உள்ளானவர் பெயர் சோனு குமார் என்றும், சொந்தப் பகை காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. சோனுவை தாக்கிய ஆறு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் வைரலாகும் இச்சம்பவம் குறித்து வேறு சில ஊடகங்களிலும் செய்தி வந்திருப்பதை காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் நடந்ததல்ல; பஞ்சாபில் நடந்தது என்பது தெளிவாகின்றது.

பஞ்சாபில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பது ஆம் அத்மி கட்சியாகும். அதேபோல் சம்பவம் நடந்த சங்ரூர் மாவட்டத்தின் சட்டமன்ற உறுப்பினரும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவரே ஆவார். இதனை அடிப்படையாக வைத்து பார்க்கையில் வைரலாகும் வன்முறை சம்பவத்திற்கு பாஜக பொறுப்பேற்க முடியாது என அறிய முடிகின்றது.

Also Read: மதுவந்தி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றாரா அண்ணாமலை?

Conclusion

உ.பி.யின் நிலை என்று பரப்பப்படும் வன்முறை சம்பவம் உண்மையில் கடந்த ஆண்டு பஞ்சாபில் நடந்ததாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report from ABP Punjabi, Dated February 20, 2023
Report from Punjab Kesari, Dated February 20, 2023
Report from Times of India, Dated February 20, 2023
Report from Indian Express, Dated February 21, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular