சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkஅதிமுக பாஜக கூட்டணி முறிவு என்று ஜெயக்குமார் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்றாரா ஈ.பி.எஸ்?

அதிமுக பாஜக கூட்டணி முறிவு என்று ஜெயக்குமார் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்றாரா ஈ.பி.எஸ்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: அதிமுக பாஜக கூட்டணி முறிவு என்று ஜெயக்குமார் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து –  ஈ.பி.எஸ்.

Fact: வைரலாகும் இத்தகவல் தவறானது என்று புதிய தலைமுறையும் அதிமுக தரப்பும் உறுதி செய்துள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் அதிமுக – பாஜகவுக்கு இடையேயான கூட்டணி முடிவுற்றதாக தெரிவித்தார்.

இந்நிலையில் “ஜெயக்குமார் பேசியது அவருடய தனிப்பட்ட கருத்து அது அதிமுக கருத்து அல்ல. கூட்டணி பற்றி டெல்லி தலைவர்களிடம் பேசுவோம்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அதிமுக பாஜக கூட்டணி முறிவு என்று ஜெயக்குமார் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் தகவல்

X Link | Archived Link

அதிமுக பாஜக கூட்டணி முறிவு என்று ஜெயக்குமார் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் தகவல்

Facebook Link

அதிமுக பாஜக கூட்டணி முறிவு என்று ஜெயக்குமார் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் தகவல்

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: நீண்ட நேரம் டையப்பர் அணிவித்ததால் புற்றுநோய் ஏற்பட்டு குழந்தை இறந்ததாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

Fact Check/Verification

அதிமுக பாஜக கூட்டணி முறிவு என்று ஜெயக்குமார் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

முன்னதாக  அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கோவை சத்யனை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர் “இத்தகவல் முற்றிலும் பொய்யானது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறவில்லை” என்று பதிலளித்தார்.

இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் புதிய தலைமுறை இவ்வாறு செய்தியை வெளியிட்டிருக்கவில்லை. மாறாக இச்செய்தி பொய்யானது என்று மறுப்பு வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர், வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை புதிய தலைமுறை வெளியிடவில்லை என்று பதிலளித்தார்.

Also Read: மொரோக்கோ நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்கள் தெருவில் உறங்குவதாக பரவும் தவறான வீடியோ!

Conclusion

அதிமுக பாஜக கூட்டணி முறிவு என்று ஜெயக்குமார் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Facebook Post from Puthiya Thalaimurai, Dated September 19, 2023
Phone conversation with Kovai Sathyan, Spokesperson, AIADMK
Phone conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular