ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkமொரோக்கோ நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்கள் தெருவில் உறங்குவதாக பரவும் தவறான வீடியோ!

மொரோக்கோ நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்கள் தெருவில் உறங்குவதாக பரவும் தவறான வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: மொரோக்கோ நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்கள் தெருவில் உறங்குகின்றனர்.

Fact: வைரலாகும் வீடியோவுக்கும் மொரோக்கோவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை; அவ்வீடியோ போர்ச்சுக்கல்லில் எடுக்கப்பட்டதாகும்.  

இம்மாதம் 8 ஆம் தேதி (செப்டம்பர் 08) மொரோக்காவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததோடு, பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்தனர்.

இந்நிலையில் “மொரோக்கோ பூமி அதிர்வினால் வீடு வாசல் சொத்து செல்வம் என்று அனைத்தையும் இழந்து வெறும் கையுடன் தெருவில் உறங்கும் மொரோக்கோ மக்கள்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றனர்.

மொரோக்கோ நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்கள் தெருவில் உறங்குவதாக பரவும் வீடியோத் தகவல்

X Link | Archived Link

மொரோக்கோ நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்கள் தெருவில் உறங்குவதாக பரவும் வீடியோத் தகவல்

Facebook Link

மொரோக்கோ நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்கள் தெருவில் உறங்குவதாக பரவும் வீடியோத் தகவல்

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மகளிர் உதவித்தொகையை வாங்கும் அதிமுகவினர் நன்றி விசுவாசமற்றவர்கள் என்றாரா எடப்பாடி பழனிச்சாமி?

Fact Check/Verification

மொரோக்கோ நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்கள் தெருவில் உறங்குவதாக கூறி வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை ஒவ்வொரு புகைப்படங்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.

இத்தேடலில் “Solo Catecumenos” எனும் யூடியூப் பக்கத்தில் போர்ச்சுக்கல்லில் இருக்கும் லிஸ்பானில் உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு இளைஞர்கள் கூட்டம் கூடியதாக குறிப்பிட்டு இதே வீடியோவை ஆகஸ்ட் 06, 2023 அன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.  

iamsolocatecumenos எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இவ்வீடியோ பதிவிடப்பட்டிருப்பதை நம் தேடலில் காண முடிந்தது.

Instagram will load in the frontend.

மொரோக்காவில் நிலநடுக்கம் வந்தது இம்மாதம் 08 ஆம் தேதியாகும். ஆனால் இவ்வீடியோ கடந்த மாதமே பகிரப்பட்டுள்ளது.

இதுக்குறித்து தொடர்ந்து தேடியதில் லிஸ்பானில் கடந்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து 6 ஆம் தேதி வரை உலக இளைஞர்கள் தினம் கொண்டாடப்பட்டதை அறிய முடிந்தது.

இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்ட வீடியோக்களையும் நம்மால் காண முடிந்தது.

கிடைத்த ஆதாரங்களின்படி தெளிவாகுவது யாதெனில்,

  1. வைரலாகும் வீடியோ மொரோக்கோவில் எடுக்கப்பட்டதல்ல, போர்சுக்கல்லில் எடுக்கப்பட்டதாகும்.
  2. அவ்வீடியோவில் இருப்பவர்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல, அவர்கள் உலக இளைஞர்கள் தினத்தில் பங்குபெற வந்தவர்களாவர்.

Also Read: சவுதி அரேபியாவில் பிரதமர் மோடிக்கு தங்கத்தில் சிலை என்று பரவும் வீடியோ உண்மையா?

Conclusion

மொரோக்கோ நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்கள் தெருவில் உறங்குவதாக பரவும் வீடியோத் தகவல் தவறானதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Youtube Vidoo from Solo Catecumenos, Dated August 06, 2023
Instagram post from iamsolocatecumenos, Dated August 06, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular