சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024

HomeFact Checkராகுலை பிரதமராக ஏற்காதவர்கள் எதற்காக கூட்டணியில் இருக்க வேண்டும் என்றாரா ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்?

ராகுலை பிரதமராக ஏற்காதவர்கள் எதற்காக கூட்டணியில் இருக்க வேண்டும் என்றாரா ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

ராகுலை பிரதமராக ஏற்காதவர்கள் எதற்காக எங்கள் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி எழுப்பியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.

ராகுலை பிரதமராக ஏற்காதவர்கள் எதற்காக எங்கள் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் திமுக எம்.பி.யான டி.கே.எஸ்.இளங்கோவன் தமிழக முதல்வர் ஸ்டாலின்போல் ஒரு பிரதமர் வேண்டும் என்று பேசியதைத் தொடர்ந்து, “ராகுல் காந்தியை பிரதமராக ஏற்க விரும்பாதவர்கள் எதற்காக எங்கள் கூட்டணியில் இருக்க வேண்டும்” என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.

ராகுலை பிரதமராக ஏற்காதவர்கள் எதற்காக எங்கள் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 1

Facebook Link

ராகுலை பிரதமராக ஏற்காதவர்கள் எதற்காக எங்கள் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 2

Facebook Link

ராகுலை பிரதமராக ஏற்காதவர்கள் எதற்காக எங்கள் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 3

Facebook Link

Also Read: கட்சியை கலைக்கப்போகிறேன் என்றாரா சீமான்?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

ராகுலை பிரதமராக ஏற்காதவர்கள் எதற்காக எங்கள் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

ஏபிபி நாட்டின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், இந்த நியூஸ்கார்டை ஏபிபி நாடு வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். இதில் ஏபிபி நாடு வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து ஏபிபி நாட்டின் ஆசிரியர் மனோஜ் பிரபாகரைத் துறையினரைத் தொடர்புக்கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம். இதற்கு அவர், இது பொய்யான நியூஸ்கார்ட், இதை நாங்கள் வெளியிடவில்லை.” என்று விளக்கமளித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸின் சமூக ஊடகப் பொறுப்பாளர் கே.டி.லட்சுமிகாந்தனைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்துக் கேட்டதற்கு, இது முற்றிலும் பொய்யான தகவல், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இதை பேசவே இல்லை என்று பதிலளித்தார்.

Also Read: உக்ரைன் தலைநகரில் பாராஷூட் மூலம் குதித்து தாக்குதல் நடத்தும் ரஷ்ய வீரர்கள் எனப்பரவும் பழைய வீடியோ!

Conclusion

ராகுலை பிரதமராக ஏற்காதவர்கள் எதற்காக எங்கள் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும். இதனை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Fabricated

Our Sources

Manij Prabakar, ABP Nadu


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular