திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkஅண்ணாமலையின் யாத்திரையால் வணிகர் சங்கம் கடையடைப்பு என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

அண்ணாமலையின் யாத்திரையால் வணிகர் சங்கம் கடையடைப்பு என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: அண்ணாமலையின் பாதயாத்திரையால் கலவரம் ஏற்படும் என புதுகை வணிகர் சங்கம் கடையடைப்பு

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக பரவி வருகிறது.

அண்ணாமலையின் பாதயாத்திரையால் கலவரம் ஏற்படக்கூடும் என்று பயந்து புதுக்கோட்டை வணிகர் சங்கத்தினர் கடையடைப்பில் ஈடுபட்டுள்ளதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

”போஸ்டரால் புதுக்கோட்டையில் பரபரப்பு. பாஜக தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரையால் கலவரம் ஏற்படும் என்று புதுக்கோட்டை வணிகர் சங்கம் கடையடைக்க உள்ளதாக போஸ்டர் ஒட்டியிருக்கின்றனர்
அனைத்து கடைகளும் மூடப்படும் புதுக்கோட்டை வணிகர் சங்கம்”
என்று இந்த நியூஸ்கார்ட் பரவி வருகிறது.

Screenshot from Twitter @thechanakkiyan

Archived Link

Screenshot from Facebook/kamar.deen.5815

Facebook Link

Screenshot from Facebook/VPKalai

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: உத்தரகாண்ட் குறித்து மதவாத பிரச்சாரம் செய்த இந்து சாமியார் விபச்சார அழகிகளுடன் பிடிபட்டாரா?

Fact Check/Verification

அண்ணாமலையின் பாதயாத்திரையால் கலவரம் ஏற்படும் என்று புதுக்கோட்டை வணிகர் சங்கம் கடையடைப்பு செய்துள்ளதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் நியூஸ்கார்ட் புதியதலைமுறை வெளியிட்டதாகப் பரவும் நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் ஆராய்ந்தோம். ஆனால், அவ்வாறு எந்த நியூஸ்கார்டும் வெளியாகியிருக்கவில்லை.

மேலும், “இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை” என்று அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் விளக்கமளித்துள்ளனர்.  

இதுபற்றி, புதியதலைமுறை டிஜிட்டல் பொறுப்பாளர் இவானியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது” என்று விளக்கமளித்தார்.

Also Read: ‘நரக பேருந்து நிலையம்’ என்று எழுத்துப்பிழையுடன் முகப்புப் பலகை வைத்ததா கோவை மாநகராட்சி?

Conclusion

அண்ணாமலையின் பாதயாத்திரையால் கலவரம் ஏற்படும் என்று புதுக்கோட்டை வணிகர் சங்கம் கடையடைப்பு செய்துள்ளதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Facebook Post From, Puthiyathalaimurai,
Dated August 02, 2023
Phone Conversation With, Ivani, Puthiyathalaimurai Digital, Dated August 03, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular