வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024

HomeFact CheckFact Check: பள்ளி சீருடைகளுக்கு எதிராக தங்களது துப்பட்டாக்களைத் தூக்கி எறிந்தனரா மாணவிகள்? உண்மை என்ன?

Fact Check: பள்ளி சீருடைகளுக்கு எதிராக தங்களது துப்பட்டாக்களைத் தூக்கி எறிந்தனரா மாணவிகள்? உண்மை என்ன?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim
பள்ளி சீருடைகளுக்கு எதிராக அவை வட இந்திய மனப்பான்மையை பிரதிபலிப்பதாக தங்களது துப்பட்டாக்களைத் தூக்கி எறிந்து தமிழ்நாடு பழங்குடியின மாணவிகள் போராட்டம்.

Fact
வைரலாகும் பதிவு தவறானதாகும். “துப்பட்டா போடுங்க தோழி” என்கிற புத்தகத்தை எழுதிய ஆசிரியர் கீதா இளங்கோவனுக்கு மாணவிகள் அளித்த வரவேற்பு இது.

பள்ளி சீருடைகளுக்கு எதிராக தங்களது துப்பட்டாக்களைத் தூக்கி எறிந்து தமிழ்நாடு பழங்குடியின மாணவிகள் போராட்டம் நடத்தியதாகப் பதிவு ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

“Girls studying in a school for tribals (indigenous people) in Tamil Nadu are throwing away their dupattas (scarves) in protest against school uniforms that they think North Indian and patriarchal!” என்பதாக பேராசிரியர் அசோக் ஸ்வைன் இந்த வீடியோவைத் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பள்ளி சீருடைகளுக்கு எதிராக
Screenshot from Twitter @ashoswai

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: வந்தே பாரத் ரயிலை மத்தியபிரதேசத்தில் இருந்து இயக்கிய சுரேகா யாதவ் என்று தவறுதலாக செய்தி வெளியிட்ட சன் நியூஸ்!

Fact Check/Verification

பள்ளி சீருடைகளுக்கு எதிராகவும், அவை வட இந்தியத் தோற்றத்தை தங்களது மீது திணிப்பதாகவும் துப்பட்டாக்களைத் தூக்கி எறிந்து தமிழ்நாடு பழங்குடியின மாணவிகள் போராட்டம் நடத்தியதாகப் பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

குறிப்பிட்ட வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என்று ஆராய்ந்தபோது, கல்வராயன் மலையில் அமைந்துள்ள Aware India என்கிற அமைப்பு கள்ளக்குறிச்சியில் மூன்று நாட்கள் நடத்திய பழங்குடியின மாணவிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சியில் “துப்பட்டா போடுங்க தோழி” என்கிற புத்தகத்தை எழுதிய கீதா இளங்கோவன் சிறப்பு விருந்தினராக சென்ற நிலையில், அவரை வரவேற்கும் வகையில் அம்மாணவிகள் துப்பாட்டக்களை தூக்கி வீசியுள்ளனர் என்கிற பதிவு நமக்குக் கிடைத்தது. கீதா இளங்கோவன் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்திலேயே இதனைப் பகிர்ந்துள்ளார்.

தொடர்ந்து, இதுகுறித்து கீதா இளங்கோவன் அவர்களிடம் பேசினோம்.

பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்காகவும்,பழங்குடியினர்களுக்கு நடுவில் குழந்தைத் திருமணங்கள் அதிகமிருக்கும் சூழ்நிலையை கல்வி மூலமாக தடுக்கும் வகையில் Aware India அமைப்பு செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பு சார்பில் கள்ளக்குறிச்சியில் மூன்று நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற்றது. பழங்குடியின மாணவ, மாணவிகளிடையே வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் நான் மற்றும் இன்னும் பல எழுத்தாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டோம். அப்போது, அந்நிகழ்வுக்கு சென்ற என்னை வரவேற்கும் விதமாக அம்மாணவிகள் துப்பட்டாவைத் தூக்கி எறிந்து வரவேற்றனர். முதல்நாளே என்னுடைய தோழியும், எழுத்தாளருமான நிவேதிதா லூயிஸ் இதனை விளையாட்டாக மாணவிகளிடம் கூறியுள்ளார். அதனை அவர்கள் என்னை வரவேற்கும் வகையில் செய்தனர். மற்றபடி போராட்டம் என்று பரவும் செய்தி தவறானது; பள்ளி சீருடைகளுக்கு எதிராகவும் அவர்கள் செயல்படவில்லை. என்னுடைய புத்தகமும் என் உடல்; என் உடை என்று அனைத்து பெண்களுக்குமான கருத்துக்களையே பேசுகிறது”

என்று விளக்கமளித்தார்.

எனவே, பள்ளி சீருடைகளுக்கு எதிராகவும், வட இந்திய தாக்கத்தில் சமீபத்தில் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்ட துப்பட்டா கலாச்சாரத்திற்கு எதிராகவும் மாணவிகள் போராட்டம் நடத்தியதாகப் பரவும் தகவல் தவறானது என்பது இதன்மூலமாகத் தெளிவாகிறது.

Also Read: Fact Check: அமைச்சர் சக்கரபாணியின் காலில் விழுந்த மாணவிகள் என்று பரவும் தவறான செய்தி!

Conclusion

பள்ளி சீருடைகளுக்கு எதிராகவும், அவை வட இந்தியத் தோற்றத்தை தங்களது மீது திணிப்பதாகவும் துப்பட்டாக்களைத் தூக்கி எறிந்து தமிழ்நாடு பழங்குடியின மாணவிகள் போராட்டம் நடத்தியதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone Conversation With, Writer Geetha Ilangovan, Dated March 16, 2023
Facebook Post From, Geetha Ilangovan


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular