ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkகர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு மக்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து தெரிவித்தாரா?

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு மக்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து தெரிவித்தாரா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு மக்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து
Fact: வைரலாகும் ட்வீட் புகைப்படம் போலியானதாகும்.

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து என்று ஸ்க்ரீன் ஷாட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கர்நாடகா

”காங்கிரசை தேர்ந்தெடுத்ததற்கு கர்நாடகா என்ன விலை கொடுக்கப் போகிறதோ தெரியவில்லை. சர்வதேச #SDPI தலைவர் காங்கிரசுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார் . அந்த ட்டூவிட் தான் நீங்கள் கீழே பார்க்கிறீர்கள்” என்று பாஜகவின் SR.சேகர் உள்பட பலரும் புகைப்படம் ஒன்றை ஷேர் செய்து வருகின்றனர்.

கர்நாடகா
Screengrab from Twitter @SRSekharBJP
Screenshot from Facebook/kavita.krish3

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பாஜக எம்எல்ஏ காரில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்களை பொதுமக்கள் அடித்து நொறுக்கினார்களா?

Fact Check/Verification

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு மக்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

பாகிஸ்தான் பிரதமர் Shehbaz sharif-இன் ட்விட்டர் பக்கத்தில் நாம் ஆராய்ந்தபோது, கர்நாடகா தேர்தல் குறித்து மே 13 அன்று ட்வீட்கள் ஏதும் பதிவிடப்பட்டிருக்கவில்லை. அவரது பக்கத்தில் மே 13 அன்று பதிவிடப்பட்டிருந்த பதிவுகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணுங்கள்.

Social Blade ஆய்விலும் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வேறேந்த பதிவுகளும் மே 13 ஆம் தேதியன்று இடம்பெற்றிருக்கவில்லை என்று உறுதியானது.

Also Read: கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்துக் கொண்டு போலீசார் மீது கல்லெறிந்தவர்கள் பிடிபட்டதாக பரவும் வதந்தி!

Conclusion

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு மக்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து என்று பரவும் ட்வீட்  புகைப்படம் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Shehbaz Sharif’s Twitter account
Tweet by @N0rbertElekes, May 13

(இக்கட்டுரை நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்டது)


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular