ஏழை மாணவர்களுக்கு இலவசமாக பள்ளி புத்தகம் மற்றும் இலவசமாக பள்ளி கட்டணம் செலுத்தப்படுவதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பள்ளி புத்தகம் தேவைப்படும் குழந்தைகள் மற்றும் பள்ளி கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகள் கீழே உள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று கூறி 24 மொபைல் எண்களை குறிப்பிட்டு தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.




Also Read: இந்தியாவில் வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றாரா மகிந்த ராஜபக்சே?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
ஏழை மாணவர்களுக்கு இலவசமாக பள்ளி புத்தகம் மற்றும் இலவசமாக பள்ளி கட்டணம் செலுத்தப்படுவதாக தகவல் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் தகவலில் இந்த உதவிகளை அரசோ அல்லது ஒரு குறிப்பிட்ட தனியார் அமைப்போ செய்வதாக குறிப்பிடப்படவில்லை. வெறும் 24 மொபைல் எண்கள் கொடுத்து உதவி தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்ததது. எனவே வைரலாகும் இத்தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய அத்தகவலில் குறிப்பிடப்பட்டிருந்த 24 மொபைல் எண்களையும் தொடர்புக் கொள்ள முயற்சித்தோம். ஆனால் இதில் எந்த ஒரு எண்ணையும் நம்மால் தொடர்புக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் இதில் கொடுக்கப்பட்ட எண்களில் சில சுவிட்ச் ஆஃபில் இருந்தன. மற்றவை பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது.
இதனையடுத்து தேடுகையில் வைரலாகும் இத்தகவலானது தமிழ் தவிர்த்து, வேறு மொழிகளிலும் கடந்த சில வருடங்களாக பரவி வருவதை அறிய முடிந்தது. அவற்றிலும் இதே 24 மொபைல் எண்களே குறிப்பிடப்பட்டிருந்தன. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
தொடர்ந்து தேடுகையில், வைரலாகும் இத்தகவல் பொய்யானது என்று மகாராஷ்டிரா டைம்ஸ் கடந்த 2017 ஆம் ஆண்டு செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
அச்செய்தில், இதுபோன்ற செய்திகளை பகிர்வதால் உங்கள் குரூப்பின் நம்பகத்தன்மை கேள்வி குறியாக மாற வாய்ப்பு உள்ளது. இது நடக்காமல் இருக்க இதுபோன்ற தகவலை மற்றவர்களுக்கு பகிர்வதற்கு முன் அத்தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். யாரேனும் இதுகுறித்து புகார் அளித்தால் உங்களுக்கு தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க இதுபோன்ற தகவலை பகிர்வதற்கு முன் அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் மற்றும் மொபைல் எண்கள் உண்மையானதா என சரிபாருங்கள்” என்று பூனா சைபர் கிரைம் துணை கமிஷனர் தீபக் சாகோரே கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
Also Read: பாகிஸ்தானில் பாஜக கொடி; வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?
Conclusion
ஏழை மாணவர்களுக்கு இலவசமாக பள்ளி புத்தகம் மற்றும் இலவசமாக பள்ளி கட்டணம் செலுத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது என்று நமக்கு கிடைத்த ஆதாரங்களின் மூலம் தெளிவாகின்றது.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
Result: False/ Fabricated
Source
Article From Maharastra Times, Dated April 10, 2017
Conversation With 24 mobile numbes which mentioned in Viral Message
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)