சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkவெள்ள நிவாரணம் தரவில்லை என்று மோடியை சிறுமி அசிங்கப்படுத்தியதாக வைரலாகும் எடிட் படம்!

வெள்ள நிவாரணம் தரவில்லை என்று மோடியை சிறுமி அசிங்கப்படுத்தியதாக வைரலாகும் எடிட் படம்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: வெள்ள நிவாரணம் தரவில்லை என்று பிரதமர் மோடியை அசிங்கப்படுத்திய சிறுமி

Fact: வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும். உண்மையில் அச்சிறுமி இந்தி பள்ளி வேண்டும் என்றே கேட்டார்.

“அன்புள்ள மோடி தாத்தா. என் பெயர் துவாரகா மதிவதினி.  2ஆம் வகுப்பு படிக்கிறேன். திருச்சிக்கு வந்த நீங்க ஏன் நெல்லைக்கு வரல? வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட எங்களுக்கு ஸ்டாலின் தாத்தா 6000 ருபாய் கொடுத்தாரு. நீங்க ஒன்னுமே தரல. நாங்க ரொம்ப கஷ்டப்படுறோம். எங்களுக்கு நிவாரணம் குடுங்க” என்கிற வாசகங்கள் அடங்கிய பதாகையை சிறுமி ஒருவர் ஏந்தியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

வெள்ள நிவாரணம் தரவில்லை என்று பிரதமர் மோடியை சிறுமி ஒருவர் அசிங்கப்படுத்தியதாக வைரலாகும் புகைப்படம்

Twitter Link | Archived Link

வெள்ள நிவாரணம் தரவில்லை என்று பிரதமர் மோடியை சிறுமி ஒருவர் அசிங்கப்படுத்தியதாக வைரலாகும் புகைப்படம்

Archived Link

வெள்ள நிவாரணம் தரவில்லை என்று பிரதமர் மோடியை சிறுமி ஒருவர் அசிங்கப்படுத்தியதாக வைரலாகும் புகைப்படம்

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு முன்பே பற்றி எரியும் உபி ரயில் நிலையம் எனப்பரவும் வீடியோ உண்மையா?

Fact Check/Verification

வெள்ள நிவாரணம் தரவில்லை என்று பிரதமர் மோடியை சிறுமி ஒருவர் அசிங்கப்படுத்தியதாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி வைரலாகும் தகவல் குறித்து ஆராய்ந்தோம்.

இத்தேடலில் ““மோடி தாத்தா ஹிந்தி பள்ளிக்கூடம் கட்டி தாங்க” பிரதமர் மோடிக்குக் கோரிக்கை வைத்த சிறுமி!” என்று தலைப்பிட்டு வைரலாகும் படத்தில் காணப்படும் சிறுமி குறித்து புதிய தலைமுறை செய்தி ஒன்றை வெளியிட்டிருந்ததை காண  முடிந்தது.

வெள்ள நிவாரணம் தரவில்லை என்று பிரதமர் மோடியை சிறுமி ஒருவர் அசிங்கப்படுத்தியதாக வைரலாகும் புகைப்படம்
Screengrab from Puthiya Thalaimurai

அச்செய்தியில் சிறுமி வைத்திருந்த பதாகையில்,  “எங்கள் ஊர் நாகப்பட்டினம், இங்கு அரசு நடத்தும் பள்ளிக்கூடத்தில் ஹிந்தி படிக்க முடியவில்லை. ஹிந்தியுடன் கூடிய பள்ளிக்கூடம் கட்டுவதற்கு என் அப்பாவிடம் இடம் தரச் சொல்லுகிறேன். நீங்கள் பள்ளிக்கூடம் கட்டி தாங்க அதுல நாங்கள் ஹிந்தி கத்துக்கணும் ஜெய் ஹிந்த்” என்கிற வாசகம் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. கூடவே அந்த பதாகையின் படமும் இடம்பெற்றிருந்தது.

வெள்ள நிவாரணம் தரவில்லை என்று பிரதமர் மோடியை சிறுமி ஒருவர் அசிங்கப்படுத்தியதாக வைரலாகும் புகைப்படம்
Screengrab from Puthiya Thalaimurai

தொடர்ந்து தேடுகையில் தினமலரும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

இதுத்தவிர்த்து வேறு சில ஊடகங்களும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வெள்ள நிவாரணம் தரவில்லை என்று பிரதமர் மோடியை சிறுமி அசிங்கப்படுத்தியதாக வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டது என்பது தெளிவாகின்றது.

வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும் எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Also Read: அயோத்தி ராமர் கோயிலுக்கு திருச்சி BHEL நிறுவனம் மணிகளை தயாரித்து அனுப்பியுள்ளதா?

Conclusion

வெள்ள நிவாரணம் தரவில்லை என்று பிரதமர் மோடியை சிறுமி ஒருவர் அசிங்கப்படுத்தியதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Report from Puthiya Thalaimurai, Dated January 03, 2024
Report from Dinamalar, Dated January 02, 2024
Report from Thanthi TV, Dated January 02, 2024
Report from Samayam Tamil, Dated January 02, 2024
Report from Kamadenu Hindu Tamil, Dated January 02, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular