Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
‘Sorry வேண்டாம் - Sorry கேளு’ என்று குழப்புமுறும் வகையில் எழுதப்பட்ட பதாகையை பிடித்திருந்தார் விஜய்.
வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டதாகும். விஜய் பிடித்திருந்த உண்மையான பதாகையில் ‘Sorry வேண்டும்’ என்கிற வாசகம் இடம்பெற்றிருக்கவே இல்லை.
சிவகங்கை திருபுவன்னை காவலாளி அஜித்குமார் போலீஸ் விசார்ணையின்போது உயிரிழந்ததை தொடர்ந்து இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தவெக தலைவரும் நடிகருமான விஜய் சிலதினங்களுக்கு முன்பு அஜித்குமார் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து நேற்று சென்னையில் விஜய் தலைமையில் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அதில் ‘Sorry வேண்டாம்; நீதி வேண்டும், Sorry கேளு’ என்று எழுதப்பட்ட பதாகையை விஜய் பிடித்திருந்ததாக புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



Also Read: விஜய் மற்றும் திரிஷாவின் பழைய படம் என்று பரவும் எடிட் படம்!
நேற்று சென்னையில் நடந்த போராட்டத்தில் ‘‘Sorry வேண்டாம் – Sorry கேளு” என்று குழப்புமுறும் வகையில் எழுதப்பட்ட பதாகையை விஜய் பிடித்திருந்ததாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து, அப்படம் குறித்து தேடினோம்.
அத்தேடலில் தவெக துணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் “இன்றைய கண்டன ஆர்ப்பாட்டத்தில்” என்று தலைப்பிட்டு புகைப்படங்களுடன் அவரது எக்ஸ் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
அப்புகைப்படங்களில் விஜய் பதாகை ஏந்தி நிற்கும் படமும் இடம்பெற்றிருந்தது. ஆனால் அப்பதாகையில் “Sorry வேண்டாம்; நீதி வேண்டும்” என்கிற வாசகங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது. ‘Sorry கேளு’ என்கிற மற்றொரு வாசகம் இடம்பெற்றிருக்கவில்லை.

தொடர்ந்து தேடுகையில் புதிய தலைமுறை, CNBC TV18 உள்ளிட்ட ஊடகங்களின் யூடியூப் பக்கங்களிலும் நேற்று நடந்த தவெக ஆர்ப்பட்டம் குறித்து செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
அச்செய்திகளின் வீடியோக்களிலும் விஜய் பதாகை ஏந்தி நிற்கும் காட்சி இடபெற்றிருந்தது. அக்காட்சிகளிலும் விஜய் ஏந்தியிருந்த பதாகையில் “Sorry வேண்டாம்; நீதி வேண்டும்” என்கிற வாசகங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது. ‘Sorry கேளு’ என்கிற வாசகம் இடம்பெற்றிருக்கவில்லை.


இவற்றினடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்ட படம் என அறிய முடிந்தது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும் எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டு காட்டியுள்ளோம்.

Also Read: மெரினா கடற்கரை விமான நிலையம் அமைக்க சரியான இடம் என்று கூறினாரா தவெக தலைவர் விஜய்?
நேற்று சென்னையில் நடந்த போராட்டத்தில் ‘‘Sorry வேண்டாம் – Sorry கேளு” என்று குழப்புமுறும் வகையில் எழுதப்பட்ட பதாகையை விஜய் பிடித்திருந்ததாக பரவும் படம் எடிட் செய்யப்பட்டதாகும். விஜய் பிடித்திருந்த பதாகையில் ‘Sorry கேளு’ என்கிற வாசகம் இடம்பெற்றிருக்கவே இல்லை.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X Post by CTR Nirmarkumar, Deputy General Secretary, TVK, dated July 13, 2025
Report by Puthiya Thalaimurai, dated July 13, 2025
Report by CNBC TV18, dated July 13, 2025
Ramkumar Kaliamurthy
November 28, 2025
Ramkumar Kaliamurthy
October 24, 2025
Ramkumar Kaliamurthy
November 26, 2025