Fact Check
கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு திமுகவினர் ஆம்புலன்ஸில் நடனமாடினரா?
Claim
கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு திமுகவினர் ஆம்புலன்ஸில் நடனமாடினர்.
Fact
வைரலாகும் தகவல் தவறானதாகும். வைராலாகும் வீடியோவுக்கும் கரூர் சம்பவத்திற்கும் தொடர்பில்லை. இச்சம்பவம் நெல்லையில் கரூர் சம்பவம் நடப்பதற்கு ஆறு நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது.
கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு திமுகவினர் ஆம்புலன்ஸில் நடனமாடியதாக கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கரூர் துயர சம்பவத்திற்கு பின் சிரித்துக்கொண்டே புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தாரா விஜய்?
Fact Check/Verification
கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு திமுகவினர் ஆம்புலன்ஸில் நடனமாடியதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து, அவ்வீடியோ குறித்து தேடினோம்.
அத்தேடலில் சன் நியூஸ் ஊடகத்தில் செப்டம்பர் 21, 2025 அன்று இவ்வீடியோ குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அதாவது கரூர் சம்பவம் நடப்பதற்கு ஆறு நாட்களுக்கு முன்பு இச்செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அச்செய்தியில் திருநெல்வேலியின் வள்ளியூருக்கு அருகே தமிழ்நாடு அரசின் நடமாடும் மருத்துவமனை வாகனத்தில் ஊழியர்கள் நடனமாடியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் தந்தி டிவி, பாலிமர் நியூஸ், சத்தியம் நியூஸ் உள்ளிட்ட ஊடகங்களிலும் இதே தகவலுடன் வைரலாகும் வீடியோ குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவுக்கும் கரூர் சம்பவத்திற்கும் தொடர்பில்லை என தெளிவாகின்றது.
Conclusion
கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு திமுகவினர் ஆம்புலன்ஸில் நடனமாடியதாக பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
வைராலாகும் வீடியோவுக்கும் கரூர் சம்பவத்திற்கும் தொடர்பில்லை. இச்சம்பவம் திருநெல்வேலியில் கரூர் சம்பவம் நடப்பதற்கு ஆறு நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report by Sun News, dated September 21, 2025
Report by Thanthi TV, dated September 21, 2025
Report by Polimer News, dated September 21, 2025
Report by Sathyam News, dated September 21, 2025