கேரளாவில் பாகிஸ்தான் கொடியை எரித்து போராட்டம் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“கேரளாவில் நடந்த சிறப்பான சம்பவம். பாகிஸ்தான் கோடியை எரித்து போராட்டம்” என்று இந்த வீடியோ பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சட்டமியற்றுவதில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்றாரா ஈபிஎஸ்?
Fact Check/Verification
கேரளாவில் பாகிஸ்தான் கொடியை எரித்து போராட்டம் என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அந்த வீடியோ ஜம்முவில் எடுக்கப்பட்டது என்பது நமக்குத் தெரிய வந்தது.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்கமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த தாக்குதலை கண்டித்து டோக்ரா முன்னணி என்கிற அமைப்பு ஜம்முவில் போராட்டம் நடத்தியது.
இந்த போராட்டம் குறித்த செய்தி First Indian News, Rising Kashmir உள்ளிட்ட ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

இந்த போராட்டத்தின் வீடியோவே தற்போது கேரளாவில் பாகிஸ்தான் கொடியை எரித்து போராட்டம் என்று பரவுகிறது.
Also Read: மேற்கு வங்கத்தை நோக்கி படையெடுக்கும் காவி போராளிகள் என்று பரவும் வீடியோ உண்மையா?
Conclusion
கேரளாவில் பாகிஸ்தான் கொடியை எரித்து போராட்டம் என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video From, Times Now, Dated April 23, 2025
YouTube Video From, FirstIndiaTv, Dated April 23, 2025