Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
அதிரப்பள்ளி வனப்பகுதியில் புலி மானை வேட்டையாடி இழுத்து சென்றதாக பரவும் வீடியோ.
இத்தகவல் தவறானதாகும். மகாராஷ்டிராவிலிருக்கும் தடோபா தேசிய தேசிய பூங்காவில் புலி மாட்டை வேட்டையாடி இழுந்து சென்ற வீடியோவே இவ்வாறு பரப்பப்படுகின்றது.
கேரள மாநிலத்திலுள்ள அதிரப்பள்ளி வனப்பகுதியில் புலி மானை வேட்டையாடி இழுத்து சென்றதாக கூறி வீடியோவுடன் செய்தி ஒன்று புதிய தலைமுறை, ஈ-தமிழ் நியூஸ் உள்ளிட்ட ஊடகங்களில் வெளிவந்துள்ளது.


ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ‘I love Muhammad’ ஸ்டிக்கர் ஒட்டிய இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
அதிரப்பள்ளி வனப்பகுதியில் புலி மானை வேட்டையாடி இழுத்து சென்றதாக வீடியோ ஒன்று ஊடகங்களில் வெளிவந்ததை தொடர்ந்து, அவ்வீடியோ குறித்த உண்மையறிய, அவ்வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.
அத்தேடலில் ரன்வீர் சிங் கௌதம் எனும் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு சொந்தமான விடுதிக்கு அருகில் புலி ஒன்று மாடு ஒன்றை அடித்து இழுத்து சென்றதாக கூறி வைரலாகும் வீடியோவை பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் ரன்வீர் சிங் கௌதமுக்கு சொந்தமான ‘The Jungle – Safari & Stay’ விடுதியின் ஃபேஸ்புக் பக்கத்திலும் வைரலாகும் வீடியோ பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.
இவ்விடுதியானது மகாராஷ்டிராவில் இருக்கும் தடோபா தேசிய பூங்காவுக்கு அருகில் உள்ளது என இவ்விடுதியின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் மூலம் உறுதி செய்ய முடிந்தது.
இதனையடுத்து ரன்வீர் சிங் கௌதமை தொடர்புக் கொண்டு இவ்வீடியோ குறித்து விசாரித்தோம்.
அவர் வைரலாகும் வீடியோவை அவர்தான படம்பிடித்ததாகவும், இச்சம்பவம் மகாராஷ்டிராவின் தடோபா தேசிய பூங்காவிலிருக்கும் மொஹர்லி நுழைவாயிலுக்கு அருகில் நடந்ததாகவும் தெரிவித்தார்.
அதேபோல் வீடியோவில் காணப்படும் புலி மானை இழுத்துச் செல்லவில்லை; மாட்டைத்தான் இழுத்துச்சென்றது என்றும் அவர் தெரிவித்தார்.
கிடைத்த ஆதாரங்களின்படி தெளிவாகுவது யாதெனில்,
அதிரப்பள்ளி வனப்பகுதியில் புலி மானை வேட்டையாடி இழுத்து சென்றதாக பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram Post by Ranveer Singh Gautam, Wildlife Photographer, dated October 4, 2025
Facebook Post by The Jungle – Safari & Stay, dated October 4, 2025
Phone conversation with Ranveer Singh Gautam, Wildlife Photographer.
Ramkumar Kaliamurthy
November 20, 2025
Ramkumar Kaliamurthy
November 14, 2025
Ramkumar Kaliamurthy
May 6, 2024