ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkமாமன்னன் பட இயக்குனர் மாரி செல்வராஜை பிளாஸ்டிக் சேரில் அமர வைத்தாரா உதயநிதி ஸ்டாலின்?

மாமன்னன் பட இயக்குனர் மாரி செல்வராஜை பிளாஸ்டிக் சேரில் அமர வைத்தாரா உதயநிதி ஸ்டாலின்?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: மாமன்னன் இயக்குனர் மாரி செல்வராஜை பிளாஸ்டிக் சேரில் அமர வைத்த உதயநிதி ஸ்டாலின்

Fact: வைரலாகும் புகைப்படம் தவறான புரிதலுடன் பரவுகிறது.

மாமன்னன் பட இயக்குனர் மாரி செல்வராஜை உதயநிதி ஸ்டாலின் பிளாஸ்டிக் சேரில் அமர வைத்ததாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

“கார் கொடுத்தோங்கிறதுக்காக ஈக்குவலா சேர் கொடுப்போம்னு எதிர்பார்க்காதீங்க. நல்ல சேர் நான்கு சும்மா கிடந்தாலும் “பிளாஸ்டிக்” சேர் தான் உங்க தகுதிக்கு கொடுப்போம்  – சின்னவர் உதய்” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது.

மாமன்னன்
Screenshot from Twitter @GowriSankarD_

Archived Link

Screenshot from Twitter @knrsivaraj80

Archived Link

Screenshot from Twitter @EKalliappan

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மாமன்னன் படக்குழுவினர் மீது அவதூறு வழக்கு தொடுப்பேன் என்றாரா ஈ.பி.எஸ்?

Fact Check/Verification

மாமன்னன் பட இயக்குனர் மாரி செல்வராஜை உதயநிதி ஸ்டாலின் சாதிய மனநிலையுடன் பிளாஸ்டிக் சேரில் அமர வைத்ததாகப் பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

அதன்படி, மாமன்னன் படக்குழுவினர் அப்பட வெற்றியைத் தொடர்ந்து படத்தில் நடித்த பலரையும் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் வடிவேலுவை அவரது வீட்டில் சந்தித்த இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி ஸ்டாலின், அதுகுறித்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர். அப்புகைப்படங்களில் பல இடங்களிலும், வீடியோவிலும் வடிவேலுவின் குடும்பப்புகைப்படம் சுவரில் மாட்டப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.

குறிப்பிட்ட புகைப்படங்களில் வடிவேலுவின் பின்புறம் உள்ள சுவற்றில் அவரது இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்பட ஸ்டில் ஒன்றை காண முடிகிறது. இதன்மூலம், மாரி செல்வராஜ் அமர்ந்திருப்பது நடிகர் வடிவேலுவின் வீட்டில் என்பது தெளிவாகிறது.

மேலும், இதுகுறித்து வெளியாகியுள்ள ABP நாடு உள்ளிட்டவர்களின் செய்திகளிலும் இந்த சந்திப்பு நடைபெற்றது நடிகர் வடிவேலுவின் வீட்டில் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிகழ்வில் வடிவேலுவும் தனது வீட்டில் பிளாஸ்டிக் சேரில்தான் அமர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்நிகழ்வு திட்டமிட்டு நடைபெறவில்லை என்பது உறுதியாகிறது.

மேலும், மாமன்னன் படத்தில் நடித்த மற்றொரு நடிகரை மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்த படங்களில் அவர்கள் இருவரும் ஒன்றாகவே அமர்ந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலியா?

Conclusion

மாமன்னன் பட இயக்குனர் மாரி செல்வராஜை உதயநிதி ஸ்டாலின் சாதிய மனநிலையுடன் பிளாஸ்டிக் சேரில் அமர வைத்ததாகப் பரவும் செய்தி தவறான புரிதலில் பரவுகிறது   என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Tweet from Udayanidhi Stalin,
Dated July 05, 2023
Youtube video from ABP Nadu, Dated July 05, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular