Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
குடியரசுத் தினத்தன்று பாரத மாதா படத்தை வைக்க இஸ்லாமியப் பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

வைரலாகும் இவ்வீடியோவில் பெண் ஒருவர் பாரத மாதா படத்தை வைத்திருக்கும் ஒரு நபரிடம் அப்படத்தை பறிக்க முயற்சி செய்கிறார், கூடியிருக்கும் கூட்டத்தாரிடம் வாக்குவாதம் செய்கின்றார். வாக்குவாதம் செய்யும் இப்பெண் ஒரு இஸ்லாமியர் என்று கூறி சமூக வலைத்தளங்களில் பலரும் இவ்வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.



Also Read: ஒரு வார்டில் தோற்றாலும் பதவியை ராஜினாமா செய்வேன் என்றாரா வானதி சீனிவாசன்?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
பாரத மாதா படத்தை வைக்க இஸ்லாமியப் பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததாக வீடியோ ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, அதன் உண்மைத்தன்மை குறித்து அறிய இணையத்தில் உரிய கீவேர்டுகளை பயன்படுத்தி தேடினோம்.
இதில் தீபிகா நாராயண் பரத்வாஜ் என்பவர் மேற்கண்ட பிரச்சனை குறித்து எந்த மதத்தையும் அடையாளப்படுத்தாமல் டிவீட் ஒன்றை பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது.
மேலும் இதே டிவீட்டில் வைரலாகும் வீடியோவில் இடம்பெற்ற பெண் பதிவிட்ட டிவீட் ஒன்றை டேக் செய்து, “பெண்களை வன்கொடுமை செய்யும் ஆண்கள் எவ்வாறு பாரத மாதா படத்தை தொடலாம் என்று இவர் கூறியுள்ளார். போதாதற்கு அவர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். வாழ்க பெண் சுதந்திரம்!“ என்று அவர் (தீபிகா நாராயண் பரத்வாஜ் )பதிவிட்டுள்ளதையும் காண முடிந்தது.
தீபிகா நாராயண் பரத்வாஜ் டேக் செய்த டிவீட்டையும், அந்த பயனர் ஐடியையும் தற்சமயம் உங்களால் காண முடியாது. ஏனெனில் அவை தற்சமயம் நீக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் webarchive மூலம் நீக்கப்பட்ட அந்த உண்மையான டிவீட்டை நாங்கள் கண்டறிந்தோம். அதில் வைரலாகும் வீடியோவில் இடம்பெற்றுள்ள பெண் அவரின் செயலுக்கான காரணத்தை விளக்கி இருந்தார்.
“அவர்கள் கொடியேற்றுவதற்காக அங்கே கூடி இருந்தார்கள். அங்கே லோதாவின் தலைவரான அந்த ஆண் கறைப்படிந்த அவரின் கைகளால் பாரத மாதா படத்தை பிடித்திருந்தார். நான் அவரிடமிருந்து அப்படத்தை பறிக்க முயற்சித்தேன். நம் நாட்டில் கற்பழிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. அதற்கு இந்த ஆண்கள்தான் காரணம். இருப்பினும் இந்த ஆண்கள் தேவியின் புகைப்படம், சிலையை தொடுதற்கும், அவர்களின் கோயில்களுக்கு செல்லவும் அனுமதிக்கப்படுகிறது. இது இப்படி நடக்கலாம்? துர்கா தேவியின் உருவமான பெண்களை ஆண்கள் அடிக்கின்றனர், அவமானப்படுத்துகின்றனர், ஆசிட் வீசுகின்றனர், கற்பழிக்கின்றனர், வன்கொடுமை செய்கின்றனர். இருந்தும் அவர்கள் சுதந்திரமாக தேவியை வழிப்படுகின்றனர்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இதுக்குறித்து போலீசில் புகார் அளிக்கப் போவதாகவும் அந்த டிவீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த டிவீட்டுகள் ‘கனிகா புபேந்தர் சேக்ரி’ என்கிற டிவிட்டர் ஐடியில் பதிவிடப்பட்டுள்ளது. இதன்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் இருக்கும் பெண் இஸ்லாமியர் இல்லை என்பது தெளிவாகின்றது.

மேலும் இந்த டிவீட்டில் வைரலாகும் சம்பவம் தானேயில் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையாக வைத்து தேடுகையில் டைம்ஸ் நவ் வெளியிட்ட செய்தி ஒன்றை காண முடிந்தது. அச்செய்தியில் இச்சம்பவம் கபூர்பாவடி காவல்நிலைய சராகத்தில் நடந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து கபூர்பாவடி காவல்நிலைய சீனியர் இன்ஸ்பெக்டர் யூடி சோனாவனே அவர்களை நியூஸ்செக்கர் தரப்பில் தொடர்புக் கொண்டு இச்சம்பவம் குறித்து கேட்டோம். அதற்கு அவர், அந்தப்பெண் மனநிலை சரியில்லாதவர், ஒலிப்பெருக்கியில் வந்த சத்தத்தை அவரால் பொறுக்க முடியவில்லை. இதனால் அவர் வெளியே வந்து, என்ன நடக்கிறது கேட்டுள்ளார். இதற்கு அவர்கள் குடியரசுத் தின விழா என பதிலளித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர, அது மதத்தை தொடர்புபடுத்தி தற்போது வைரலாகியுள்ளது. ஆனால் அது உண்மையல்ல. இச்சம்பவத்திற்கும் மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை” என பதிலளித்தார்.
மேற்கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காண்கையில், மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண் பாரத மாதா படத்தை பறித்ததை மதத்தோடு தொடர்புப்படுத்தி பொய்யான ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது என்பது தெளிவாகின்றது.
குடியரசுத் தினத்தன்று பாரத மாதா படத்தை வைக்க இஸ்லாமியப் பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ முற்றிலும் பொய்யானதாகும்.
இதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False Context/False
Social media
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
November 20, 2025
Ramkumar Kaliamurthy
November 14, 2025
Ramkumar Kaliamurthy
October 27, 2025