Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
அரியலூர் மாணவி லாவண்யா மரணத்திற்கு மதமாற்ற முயற்சி காரணமில்லை என்று தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கை வெளியிட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அரியலூரில் லாவண்யா எனும் 12 ஆம் வகுப்பு மாணவி சமீபத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்டார். இவர் படித்த பள்ளியில் கிறித்தவ மதத்திற்கு மதமாற கட்டாயப்படுத்தியதாலேயே லாவண்யா இம்முடிவு எடுத்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார்.
இந்நிலையில் லாவண்யா மரணத்திற்கு மதமாற்ற முயற்சி காரணமில்லை என்று தேசிய குழந்தைகள் நல ஆணையம் (NCPCR) அறிக்கை வெளியிட்டதாக கலைஞர் செய்திகள் நியூஸ்கார்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த நியூஸ்கார்டை பலரும் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


Also Read: ஏடிஎம் பின்னை தலைகீழாக அழுத்தினால் காவல்துறையினருக்கு எச்சரிக்கை போகுமா?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
அரியலூர் மாணவி லாவண்யா மரணத்திற்கு மதமாற்ற முயற்சி காரணமில்லை என்று தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கை வெளியிட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
முன்னதாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் வெளியிட்ட அறிக்கையை ஆய்வு செய்தோம். அவ்வறிக்கைக்கையில் லாவண்யாவின் மரணத்திற்கு மதமாற்றம் காரணம் இல்லை என்று எந்த ஒரு இடத்திலும் குறிப்பிட்டிருக்கப்படவில்லை. கட்டாய மதமாற்றம் குறித்து விசாரிக்கக் கோரி லாவண்யா பெற்றோர் கொடுத்த புகார் விசாரிக்கப்படவில்லை என்றே குறிப்பிடப்பிடப்பட்டது.

முழு அறிக்கையையும் படிக்க: NCPCR Report
மேலும் இதுகுறித்து தேடுகையில், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளமான் பிஐபி ஃபேக்ட்செக்கில் (PIB Factcheck), லாவண்யாவின் மரணத்திற்கு மதமாற்றம் காரணம் இல்லை என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கை வெளியிட்டதாக பரவும் கூற்று போலியானது என்றும், அந்த அறிக்கையில் அத்தகைய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் டிவீட் ஒன்றை பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் (NCPCR) இந்த டிவீட்டை மறுடிவீட் செய்திருந்தது.

மேற்கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது லாவண்யா மரணத்திற்கு மதமாற்ற முயற்சி காரணமில்லை என்று தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கை வெளியிட்டதாக பரவும் தகவல் தவறானது என்று தெளிவாகின்றது.
Also Read: உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை என் தோளிலா கொண்டு வர முடியும் என்றாரா நிர்மலா சீதாராமன்?
அரியலூர் மாணவி லாவண்யா மரணத்திற்கு மதமாற்ற முயற்சி காரணமில்லை என்று தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கை வெளியிட்டதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும். இதனை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Tweet From PIB Chennai on March 03, 2022
NCPCR Report
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
April 4, 2022
Ramkumar Kaliamurthy
April 5, 2022
Ramkumar Kaliamurthy
March 11, 2024